இணையும் நேரமும் அடையாளமும் Jeffersonville, Indiana, USA 63-0818 1மாலை வணக்கம். இன்றிரவு இந்த இடத்திற்கு வந்து இங்கு நின்று கொண்டிருப்பது சிலாக்கியமே. இன்று காலை நான் சாலையில் வந்து கொண்டிருந்தபோது..... நான் ஜெபித்துக்கொண்டு கர்த்தருடைய சமுகத்தில் காத்திருந்தேன். நான் சாலையில் வந்து கொண்டிருந்தபோது, வானொலிப் பெட்டியை திருப்பி, வானொலி ஊழியரான கறுப்பு சகோதரர் ஸ்மித் பேசுவதைக்கேட்டேன். (இன்று காலை நீங்கள் எல்லோரும் அவர் பேசுவதைக் கேட்டீர்களா? உங்களில் யாராகிலும்?) அது ஓஹையோ வானொலி நிலையம் என்று நினைக்கிறேன். அவருடைய பிரசங்கத்தைக்குறித்து ஒருவர் என்னிடம் கூறி, “நீங்கள் வானொலியில் அவர் பேசுவதைக் கேட்கவேண்டும்” என்றார். நான், ''இன்று காலை அவரை வானொலியில் கேட்க நேர்ந்தது'' என்றேன். இன்று உலகில் பாவம் எவ்வாறு பெருகியுள்ளது என்பதைக் குறித்து அவர் பேசினார்.... நான் சற்று தூரமுள்ள மற்றொரு வானொலி நிலையத்துக்கு திருப்பி, வேறொருவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டு பயணம் செய்து வந்தேன். இங்கு அடைந்தபோது, காலை ஆராதனைக்கு ஆயத்தமாகி வர தாமதமாகிவிட்டது. எனவே இன்றிரவு இங்கு வந்து, கர்த்தருடைய ஆராதனையில் ஆராதிப்பதென்பது எங்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ள சிலாக்கியம் என்பது நிச்சயமே. 2சகோ. நெவிலைக்குறித்து பேசும்போது; அன்றொரு நாள் நம்மை விட்டு அண்மையில் பிரிந்து சென்ற நமது சகோதரியின் அடக்க ஆராதனையின்போது அளிக்கப்பட்ட செய்தி - அது யாரென்று நம்மெல்லாருக்கும் தெரியும். அது சகோதரி வீவர் இன்றிரவு ஞானஸ்நானம் பெறுவதற்கென இங்குள்ள மனிதனைக்குறித்து எண்ணிப் பார்க்கும்போது; அவள்.... அவளுக்கு இந்த குளத்தில் தான் நான் ஞானஸ்நானம் கொடுத்தேன்.... அவர்கள் அவளை சக்கர நாற்காலியில் கொண்டு வரவேண்டியிருந்தது. அவள் புற்று நோயினால் மரித்துக் கொண்டிருந்தாள். அன்றிரவு மாத்திரமே அவள் உயிரோடிருப்பாள் என்று கூறப்பட்டது. மருத்துவர்கள் அவளை கைவிட்டனர். அடுத்த நாள் காலை அவள் மரித்து போவாள். நான் அவள் வீட்டிற்கு சென்று தெய்வீக சுகமளித்தலைக் குறித்து அவளிடம் எடுத்துக் கூறினேன். அவள் திரும்பத் திரும்ப, “நீர் என் வீட்டிற்கு வர நான் தகுதியற்றவள்'' ''ஒரு போதகர் என் வீட்டிற்கு வர எனக்கு எந்த தகுதியுமில்லை'' என்று சொல்லிக் கொண்டேயிருந்தாள். அவள், ''ஐயா, நான் ஒரு பாவி''. ''இந்த நிலையில் நான் மரிக்க விரும்பவில்லை” என்றாள். இங்குள்ள கிரேஸ் வீவர் என்னை அங்கு கூட்டிச் சென்றாள். நான் அப்பொழுதுதான் களைப்பாக கூட்டங்களிலிருந்து வீட்டுக்குத் திரும்பி வந்தேன். அவளுக்காக நான் ஜெபம் செய்து, அவளுக்கு வேதத்தைப்படித்துக் காண்பித்தபோது, அவள் இரட்சிக்கப்பட்டாள். அவளால் கையையும் கூட உயர்த்த முடியவில்லை. ஆனால் அங்குள்ள எல்லோரிடமும் அவள் கைகுலுக்க விரும்பினாள். அவளுக்கு ஏதோ ஒன்று சம்பவித்தது. அவர்கள் கைகுலுக்கிக் கொண்டிருந்தபோது, அவள் கோழி இறைச்சி விற்கும் இடத்திற்கு சென்று திரும்பி வருவதாக தரிசனம் கண்டேன். நான், “இப்பொழுது சரியாகிவிடும்” என்றேன். அது பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அவள் இவ்வளவு காலமாக புற்றுநோயினால் பாதிக்கப்படாமல் இருந்தாள். அவள் புற்று நோயால் மரிக்கவில்லை. அவளுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அது அவளைக் கொன்றுவிட்டது. அவர்கள் அவளுக்கு பிராணவாயு செலுத்தினர். அவள் மாரடைப்பால் மரித்தாள். 3முடிவில் ஜனங்கள் அவள் வீட்டை விட்டு செல்வதற்கு முன்பு, ''அப்பொழுது இயேசு வந்தார்'' என்னும் பாடலைப் பாடினது என் நினைவுக்கு வந்தது. அதுதான் அப்பொழுது நேர்ந்தது. அவர் வந்து அவளுடைய உயிரை இந்த பதினெட்டு ஆண்டுகளாக காத்து வந்தார். அது எவ்வளவு பொருத்தமானது என்று எண்ணினேன். அவள் அதை பாடினபோது அதை உணராமல் இருந்திருக்கலாம், அல்லது ஒருக்கால் அதை உணர்ந்திருக்கக்கூடும். ஆனால் ''அப்பொழுது இயேசு வந்தார்'' என்னும் பாகம் எவ்வளவு பொருத்தமானது! 4பெரிய கூட்டங்களுக்கு சற்று முன்பு எனக்கு உண்மையில் பயம் ஏற்படுகிறது. இன்று காலை எனக்கு ஒருவித கலக்கம் ஏற்பட்டு, நான் ஜெபிக்க சென்றிருந்தேன். நான் மறுபடியும் இங்கு வீடு திரும்பினேன். என் குடும்பத்தை அரிசோனாவுக்கு கொண்டு சென்றேன் ...குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்வதற்காக. சற்று இளைப்பாறுவதற்கென இங்கு திரும்பி வந்தேன். வரப்போகும் வாரத்தில் சகோ. உட் மற்றும் இங்குள்ள சில சகோதர்களுடன் வேட்டையாடச் செல்லலாம் என்றிருக்கிறேன். நாங்கள் கென்டக்கிக்கு செல்லப்போகின்றோம்... சகோதரி வீவர் மரித்த அன்று நான் வர நேர்ந்தது. அடக்கத்தின்போது சகோ. நெவிலுக்கு நான் உதவியாக இங்கிருக்க முடிந்தது. 5இப்பொழுது, முயலவேண்டாம்... ஜனங்கள் குறைகூறிக் கொண்டிருப்பதைக்குறித்து நான் அதிகம் கூறவிரும்பவில்லை. ஆனால் ஒரு மனிதன்; அல்லது ஒரு ஸ்திரீ எப்பொழுதும் குறைகூறிக் கொண்டிருப்பதென்பது மிகவும் பயங்கரமான செயல்களில் ஒன்று என்பது என் கருத்து, “தேவனே, அதிலிருந்து என்னை விலக்கிக் காரும்'' என்று நான் அடிக்கடி எண்ணுவதுண்டு. பாருங்கள், அது உங்கள் விசுவாசத்தை பலவீனப்படுத்துகிறது... அவர்களுக்கு வயதாகும்போது, நாம் ஒவ்வொருவருமே - நமக்கு ஏதாவதொன்று நடந்து கொண்டேயிருக்குமென்று நான் அறிகிறேன். இந்த சிறு காரியங்கள், நமக்கு வயதாகுந்தோறும், அதிகரித்துக்கொண்டே வருமென்று எனக்குத்தெரியும். ஆனால் சாத்தான் ஒரு நபரின் வாழ்க்கையில் - புரிந்து கொள்ளாமல் கடுகடுப்புள்ள ஒரு முதியவர் அல்லது ஒரு மூதாட்டியின் வாழ்க்கையில் - ஆதிக்கம் செலுத்துவதென்பது மிகவும் பயங்கரமான செயல்களில் ஒன்றாகும். அந்த நிலையை நான் அடையமாட்டேன் என்று நம்புகிறேன். என் பாரங்களை நான் சுமந்து தேவனுடைய மகிமையினால் என் வாழ்க்கை முடிசூடப்பட்டு, அவருடைய நீடிய பொறுமை, தயவு சமாதானம், சாந்தம் ஆகியவைகளைக் கொண்டவனாய் பரிசுத்த ஆவியினால் நிறையப்படும் நிலையை நான் அடைவேன் என நம்புகிறேன். 6நான்... என் வாழ்க்கையில் என்னை எப்பொழுதும் பாதித்து வந்தது என் நரம்புத் தளர்ச்சி நிலையே. நான் கடினமாக உழைக்கும்போது, எனக்கு உண்மையில் சோர்வு உண்டாகிறது..... யாரும் எனக்காக கவலைப்படுவதில்லை என்பது போன்ற ஒருவித உணர்ச்சி. உங்கள் எல்லோருக்குமே..... உங்களுக்கும் அத்தகைய உணர்ச்சி உண்டாகின்றது. ஆனால் எனக்கு அது மிகவும் அதிகமாக உள்ளது. சில சமயங்களில் அது மிகவும் மோசமாகிவிடுகிறது. என்னால் ஒன்றுமே.... அது இறுக்கம் (Tension) அதுதான் அதை உண்டாக்குகிறது. அநேக சமயங்களில், முக்கியமாக தரிசனங்கள் அதிகமாக தோன்றும்போது, அது என்னை பாதிக்கிறது. நான் ஒரு நபரைக் காணும்போது, “இது ஒரு தரிசனம். இல்லை இல்லை, இல்லை, இது தரிசனம் அல்ல'' என்றெல்லாம் மனதில் தோன்றுகிறது. பாருங்கள்? அதன் விளைவு என்னவென்று நம்மால் உணரமுடிவதில்லை. எனவே எனக்கு வியப்பு உண்டாகின்றது. பிறகு நான் யோசிக்கத் தொடங்குகிறேன். நான் ஒரு புறம் மனதை செலுத்தி, ”கர்த்தருக்காக நான் என்ன செய்தேன்? எனக்கு ஐம்பது வயதாகிவிட்டது. கர்த்தருக்காக நான் ஒன்றுமே செய்யவில்லையே'' என்பது போன்ற போராட்டம் உண்டாகிறது.... இதை தாம் நாம், “மனப்போராட்டம்'' (have the blues) என்றழைக்கிறோம். என் வயதுள்ள சகோதரராகிய உங்களில் சிலருக்கு அது என்னவென்று தெரியும். என் தகப்பனார் அதைக்குறித்து பேசியிருக்கிறார். அவர் என்ன கூறினார் என்று அப்பொழுது எனக்குப் புரியவில்லை. ஆனால் அது என்னவென்று இப்பொழுது எனக்கு நிச்சயமாகத் தெரியும். எனவே அப்படிப்பட்ட உணர்ச்சி நமக்கு உண்டாகின்றது. ஆனால் அது ஒன்றும் உண்மையல்ல. அது நீங்களே, அது உங்களுக்குத் தெரியும். பாருங்கள், நீங்கள் தான் அதை செய்கின்றீர்கள் என்று உங்களுக்கே தெரியும். 7எனவே என்னையே சிறிது அமைதியாக்கிக் கொண்டு, விரைவில் வருமென்று நான் எதிர்பார்க்கும் அந்த வேகமான நேரத்துக்கு என்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறேன்... நான் இப்பொழுதே கூட்டங்களுக்காக நியூயார்க் செல்ல வேண்டும். அங்கிருந்து ஷ்ரீவ்போர்ட்டுக்கு, பின்பு பீனிக்ஸுக்கு சென்று, அதன் பிறகு மேற்கு பாகத்தை சுற்றி வரவேண்டும்..... அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தென் எல்லையில். இப்பொழுது அவர்கள் என் வெளிநாட்டுப் பயணத்துக்காக ஆயத்தங்களைச் செய்து வருகின்றனர். அது ஆண்டு தொடங்கினவுடனே, ஒருக்கால் மார்ச்சு அல்லது ஏப்ரல் மாதத்தில் இருக்கும் - அப்படி ஏதோ ஒரு மாதம். அடுத்த பயணத்தின் போது, நாங்கள் ஸ்டாக்ஹோம் அல்லது ஆஸ்லோவில் தொடங்கி கூடுமானால் உலகம் பூராவும் சுற்றி வரப்போகிறோம். 8இப்பொழுது உடலைத் தேற்றிக் கொள்ள சிறிது வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறேன். கர்த்தருக்கு சித்தமானால், அடுத்த ஞாயிறு கென்டக்கியிலிருந்து திரும்பி வந்துவிடுவேன். கர்த்தருக்கு பிரீதியாயிருந்து, சகோ. நெவிலுக்கு ஆட்சேபனை எதுவும் இல்லையென்றால், அடுத்த ஞாயிறன்று ஆராதனை நடத்த முயற்சி செய்கிறேன் - கர்த்தருக்கு சித்தமானால். சகோ. நெவிலைப்போல் அவருக்கு சித்தமிருந்தால், நான் இங்கு வருவேன். பாருங்கள்? ஆம், ஐயா. சகோ. நெவிலைப்போல் அவருக்கும் சித்தமிருந்தால். அவருக்கும் சித்தமிருக்கும் என்று நம்புகிறேன்.... கர்த்தருக்கு சித்தமானால், விரைவில் உங்களை விட்டு சிறிது காலம் பிரிந்திருப்பேன் என்று அறிகிறேன். 9என் இருயத்திலுள்ள சில செய்திகளை உங்களிடம் எடுத்துக்கூறி அவைகளின் பேரில் நாம் ஐக்கியங்கொள்ளலாம் என்று எண்ணுகிறேன். சில செய்திகள் என்னிடம் உள்ளன - ஐந்து அல்லது ஆறு செய்திகள். இவை கடந்த சில நாட்களில் எனக்கு உண்டானவை. நான் சில நாட்கள் அணில் வேட்டைக்காகச் சென்றிருந்தேன். நான் காட்டுக்கு செல்லும்போது என்னுடன் காகிதத்தையும் பென்சிலையும் கொண்டு செல்வது வழக்கம். பாருங்கள்? நல்ல பகல் வெளிச்சம் உள்ளபோது, எங்காவது ஒரு மரத்தில் சாய்ந்து உட்காருவேன். நான் உறங்காமல் இருந்தால் ஜெபிக்கத் தொடங்குவேன். அப்பொழுது நான்... கர்த்தர் ஏதாவதொன்றை அருளுவார். அப்பொழுது நான் சிறு குறிப்புகளை எழுதிக்கொள்வேன், பாருங்கள். நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? பிறகு நான் சுயநினைவுக்கு வரும்போது... நான் இங்கு வந்து அவை எல்லாவற்யுைம் ஒரு புத்தகத்தில் எழுதிக்கொள்வேன். எனக்கு பிரசங்கம் செய்ய அழைப்பு வரும்போது, நான் ஓடிச்சென்று அந்த புத்தகத்தை எடுத்துப்படித்து, எதன் பேரில் பேசத்தொடங்குவது என்று எத்தனிப்பேன், பாருங்கள் இப்பொழுது அதுதான் நடந்தது. 10எனவே இப்பொழுது, கர்த்தருக்கு சித்தமானால், நான் பேச விரும்புவது என்னவெனில்... நான் நீண்ட, பெரிய செய்திகளை சிறிதாக்க விரும்புகிறேன். நீண்ட செய்திகள் மணிக் கணக்காகின்றன. சென்ற இரவு சிக்காகோவில் முப்பது நிமிடங்களுக்கு ஒரு சிறு செய்தி அளிக்க கர்த்தர் எனக்குதவி செய்தார். ஒருவர் என்னிடம் வந்து, ''உம்மால் முடியாதென்று நினைத்தேன். ஆனால் நீர் செய்துவிட்டீர்'' என்றார். இரண்டரை அல்லது மூன்று மணி நேரத்திலிருந்து முப்பது நிமிடங்கள், பாருங்கள். எனவே இன்றிரவும், நான் துரிதமாக பிரசங்கித்து, சிறிது பயிற்சி பெற விரும்புகிறேன். உங்களை நீண்ட நேரம் பிடித்து வைக்கப்போவதில்லை. 11தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நான் எங்கு சென்றபோதிலும், இந்த கூடாரத்தைப் போன்ற ஒரு இடம் இல்லவே இல்லை. இது வீடு, இனிய வீடு. நான் வீவர் குடும்பத்துக்கும் மரித்துப்போன விலையேறப்பெற்ற கறுப்பு நிற சகோதரன் குடும்பத்துக்கும் என் அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மரிப்பதற்கு முன்பு அவருடன் சிறிது நேரம் ஜெபித்தேன். அவர் மிகவும் அருமை குணம் படைத்தவர். அவர் இப்பொழுது தேவனுடன் வீட்டில் இருக்கிறார். எல்லாம் முடிந்துவிட்டது. நாம் எப்படியும் அங்கு செல்லத்தான் வேண்டும். அது நம்மெல்லாருக்கும் தெரியும். எனவே நாம்..... கர்த்தர்தாமே அவர்களுடைய ஆத்துமாக்களை சமாதானத்துடன் இளைப்பாறச் செய்வாராக. என்றாவது ஒருநாள் நாம் அப்பாலுள்ள அந்த தேசத்தில் ஒன்று சேருவோம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அங்கு வியாதி, துயரம் மரணம் எதுவும் இருக்காது. அது வரைக்கும், சுவிசேஷத்திற்கென நம்மால் இயன்ற அனைத்தும் செய்வோம். 12இறுக்கத்தைப்பற்றி பேசும்போது; அதைக்குறித்து இன்று காலை நான் ஜெபித்துக் கொண்டிருந்தேன், உங்களுக்கு இறுக்கம் இல்லாமல் போயிருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? அதை யோசித்துப் பாருங்கள், இறுக்கம் வாழ்க்கையின் ஒரு பாகம். அப்படி நான் யோசித்தபோது, அது என்னை ஒருவிதம் உற்சாகப்படுத்தினது. உங்களுக்கு இறுக்கம் இல்லாமல் போயிருந்தால், நீங்கள் வெறும் கந்தை துணி பொம்மையாக இருந்திருப்பீர்கள். உங்களுக்கு எவ்வித உணர்ச்சியும் இருந்திருக்காது. நீங்கள் செயல் புரிவதற்கென ஒன்றும் இருந்திருக்காது. ஒரு கணவனும் மனைவியும் போல. அவள் ஏதாவதொன்றை செய்ய நினைத்து, அவர்கள் ஒன்றாக செயல்புரிய முயலும்போது (முக்கியமாக கிறிஸ்தவர்கள்). மற்றொருவர் ஒன்றை செய்ய விரும்பினால்.... நீங்கள் ஒன்றாக சேரும்போது..... அவள் என்ன செய்தாள் என்று நீங்கள் அறியும்போது; அவள் அறிந்து கொள்கிறாள்.... பாருங்கள், இறுக்கம் உண்மையில் உங்கள் இருவரையும் அருகாமையில் கொண்டு வருகிறது. யாராகிலும் ஒருவர் உங்களிடம், “நீங்கள் நல்லவராயிராதபோது, உங்கள் மனைவி இறுக்கத்தின் வழியாக எவ்வளவாக கடந்து சென்றாள் என்று சிந்தித்து பாருங்கள்'' என்றோ ''நீ நல்லவராயிராதபோது, உன் கணவர் இறுக்கம் கொண்டார். அதெல்லாம் மன்னிக்கப்பட்டபோது, நீ அவருக்காக எவ்வளவு நல்லுணர்வு கொண்டிருக்கிறாய். என்னே, நீ ....'' என்று கூறும்போது! பாருங்கள், உங்களுக்கு இறுக்கம் தேவை. அவ்வளவுதான். 13சற்று யோசித்து பாருங்கள். உங்களுக்கு உணர்ச்சி வலி ஒன்றும் இல்லாதிருந்தால் எப்படியிருந்திருக்கும்? வலியே இல்லாமல் இருந்தால், எப்படியிருந்திருக்கும்?உங்களுக்கு உணர்ச்சியே இருக்காது. பாருங்கள்? உங்களுக்கு உணர்ச்சி இல்லாமலிருந்தால், உங்கள் புலன்களில் ஒன்று போய்விட்டிருக்கும். பாருங்கள்? எனவே, பாருங்கள், எல்லாமே எப்படியும் சரியாயுள்ளது. எனவே, “தேவனே, அதை தாங்கிக்கொள்ள எங்களுக்கு கிருபையளியும்.'' அதுதான். நான் அந்த கிருபையுடன் அங்கு நின்று கொண்டு, ''இந்த வாழ்க்கை முடிவு பெற்ற பின்பு, மற்ற பக்கத்தில் பெரிய ஒன்று காத்திருக்கிறது. அங்கு போக நாங்கள் எதிர் நோக்கியிருக்கிறோம்'' என்று கூறுவேன். இவையனைத்தும் இறுக்கம் என்று நாம் அறிகிறோம். 14கிறிஸ்தவ மார்க்கத்தை ஏற்றுக்கொண்டால் நீங்கள் கவலையினின்று விடுபடுகின்றீர்கள் என்றவிதமாய் அதை அறிமுகப்படுத்துகின்றனர். அது அப்படியில்லை. “நீங்கள் இறுக்கத்தினின்று விடுபடுகின்றீர்கள்.'' ஓ, இல்லை! சொல்லப்போனால், நீங்கள் கிறிஸ்தவராகும்போது, இறுக்கம் உண்டாகின்றது. ஏனெனில் அது வரைக்கும் நீங்கள் பொறுப்பற்றவர்களாய், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைக் குறித்து கவலையற்றவர்களாய் வாழ்ந்து வந்தீர்கள். ஆனால் நீங்கள் உண்மையான கிறிஸ்தவராகும்போது, ''நான் கர்த்தரை பிரீதிபடுத்துகின்றேனா? அவர் கூறுவதைக் கேட்க முடிந்தால்'' என்று ஒவ்வொரு நொடியும் கவலை கொள்கிறீர்கள். அது உங்களுக்கு இறுக்கத்தை விளைவித்து, உங்களை ஜாக்கிரதையாக இருக்கச் செய்கிறது. அதுதான் உங்களை சீர்படுத்துகிறது. எனவே இறுக்கம் என்பது ஆசீர்வாதமே. அதை எந்தவிதத்தில் நீங்கள் நோக்குகின்றீர்களோ அதை பொறுத்தது. பாருங்கள்? நீங்கள் மற்ற பாகத்தில் அதை நோக்கினால்... ஒரு ரொட்டியை நீங்கள் எவ்வளவு மெல்லியதாக அறுத்தாலும், அதற்கு இரு பக்கங்கள் உண்டு, பாருங்கள். எனவே நீங்கள் இரு பக்கங்களையும் காணவேண்டும். எனவே இறுக்கம் என்பது..... நான், ''ஒ, என்னே! அது... இந்த இறுக்கம் எல்லாம் என்ன? இந்த இறுக்கம் இல்லாமல் பிறந்திருந்தால் நலமாயிருக்கும்'' என்று எண்ணுகிறேன். இந்த இறுக்கம் இல்லாமல் போயிருந்தால், இப்பொழுதுள்ள நிலையை நான் அடைந்திருக்க மாட்டேன். நான் ஒருக்கால் கிறிஸ்தவனாகவே இருந்திருக்க மாட்டேன். இந்த இறுக்கம் தான் என்னை இயேசு கிறிஸ்துவினிடம் விரட்டினது. பாருங்கள்? எனவே எனக்கு அது ஆசீர்வாதமாகவே இருந்துள்ளது. 15எனவே பவுல் கூறினது போன்று; அவனுக்கு ஏதோ, ஒருவிதமான இறுக்கம் அல்லது ஏதோ ஒன்று இருந்தது. அது அவனை விட்டு நீங்கும்படிக்கு அவன் மூன்று தரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டான். ஆனால் கர்த்தரோ, ''என் பவுலே, என் கிருபை உனக்குப் போதும்'' என்று சொல்லிவிட்டார். அப்பொழுது பவுல், “என் பலவீனங்களைக் குறித்து நான் மேன்மை பாராட்டுவேன். நான் பலவீனமாயிருக்கும் போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்'' என்றான். பாருங்கள்? அது தேவனுடைய சித்தமாயுள்ள வரைக்கும். அது சரியே. அது என்னை அதிகமாக தொல்லைப்படுத்தி எனக்கு பயத்தை விளைவித்த போது ஒரு தரம் - எட்டு அல்லது பத்து ஆண்டுகளுக்கு முன்பு - அவரிடத்தில் வேண்டிக்கொண்டேன். அவர், ''அது உனக்கு மறுபடியும் பயத்தை விளைவிக்காது'' என்று சொல்லிவிட்டார். அதன் பிறகு அது எனக்கு பயத்தை விளைவிக்கவே இல்லை. இல்லை, ஐயா! ஆகையால் நான் அதைப்பற்றி கவலைப்படுவதேயில்லை. அதை நான் உணருகிறேன். அது உள்ளதென்று எனக்குத் தெரியும். ஆனால் நான் சென்று கொண்டேயிருக்கிறேன். ஏனெனில் அது எனக்கு பயத்தை விளைவிப்பதேயில்லை. அதற்காக நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். வேண்டுமானால் அவர், “அந்த இறுக்கம் இனிமேல் இருக்காது” என்று கூறியிருக்கலாம். அவர் அப்படிக் கூறாமல், ''அது உனக்கு பயத்தை விளைவிக்காது'' என்று மாத்திரம் கூறினார். எனவே அது நடக்க வேண்டும் என்று அவருடைய சித்தமாயுள்ளது. எனவே அதை நான் தழுவிக்கொண்டு, ''கர்த்தாவே, உமக்கு நன்றி. நான் அந்த வழியாகவே நடந்து செல்கிறேன்'' என்று கூறுகிறேன். 16இப்பொழுது நாம் சற்று நேரம் ஜெபத்துக்காக தலை வணங்குவோம். ஜெபத்துக்காக விசேஷித்த விண்ணப்பம் ஏதாகிலும் உண்டா? (இங்கு உறுமால்கள் வைக்கப்பட்டுள்ளதை காண்கிறேன்). உங்கள் கைகளை உயர்த்துங்கள். கர்த்தாவே, இந்த பிள்ளைகள் ஒவ்வொருவரையும் நீர் ஆசீர்வதிப்பீராக. எங்கள் பரலோகப் பிதாவே, உம்முடைய மகிமையுள்ள, மகத்துவமுள்ள கிருபையின் சிங்காசனத்தை நாங்கள் அணுகும் இந்நேரத்தில்; ஏனெனில் நாங்கள் அங்கு வரவேண்டுமென்று கூறப்பட்டுள்ளோம். இயேசு கிறிஸ்து எங்களை அழைத்ததன் நிமித்தம் நாங்கள் வருகிறோம். நாங்கள் எங்கள் கவலைகளுடன் வந்து அவைகளை அவர் மேல் வைத்து விடுகிறோம். ஏனெனில் அவர் எங்களை விசாரிக்கிறவராயிருக்கிறார். அவர் எங்களை விசாரிக்கிறவராயிருக்கிறார் என்பது எங்களுக்கு எவ்வளவு ஆறுதலாக உள்ளது! பரலோகத்தின் மகத்தான தேவன், சிருஷ்டி கர்த்தர், தமது சிருஷ்டிகளாகிய எங்களுக்காக கவலை கொள்கிறார். கர்த்தாவே, அதற்காக நாங்கள் மகிழ்ச்சியுள்ளவர்களாயிருக்கிறோம் நாங்கள் வாழும் இக்காலத்தில் உமது வார்த்தையிலிருந்து நாங்கள் ஆறுதலை பெறக்கூடும் என்பது எங்களுக்கு எப்படிப்பட்ட ஆறுதலை அளிக்கிறது! உமது வாக்குத்தத்தமே எங்கள் ஆறுதலாயுள்ளது. எங்கள் விண்ணப்பங்களை உமக்குத் தெரியப்படுத்த வேண்டுமென்றும், ''என் நாமத்தில் எதைக்கேட்டாலும், அதை தருவேன்'' என்றும் நீர் வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறீர். “கேளுங்கள், அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும். இந்த மலையைப் பார்த்து, 'பெயர்ந்து போ' என்று சொல்லி சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அது அப்படியே ஆகும்.'' என்னும் இந்த மகத்தான வாக்குத்தத்தங்களை ஆதாரமாகக் கொண்டு நாங்கள் கேட்டுக் கொள்வதை பெற்றுக்கொள்ள முடியும். கர்த்தாவே, கரங்கள் உயர்த்தப்பட்டன. அவர்களுக்கு ஏதோ தேவையுள்ளது. அவர்களுடைய தேவை இன்னதென்று நீர் அறிந்திருக்கிறீர். பிதாவே, அவர்களுடைய குறைவுகளை நிறைவாக்குவீராக. என் ஜெபத்தையும் அவர்களுடைய ஜெபத்துடன் கூட உமக்கு முன்பாக சமர்ப்பிக்கிறேன். என் கையும் அவர்களுடைய கைகளுடன் கூட உயர்த்தப்பட்டன. இந்த மேசையின்மேல் உறுமால்கள் வைக்கப்பட்டுள்ளன. ஓ, எவ்வாறு ஜனங்கள் தங்கள் விசுவாசத்துடன், தீரமான விசுவாசத்துடன், கர்த்தாவே... வியாதிப்பட்டுள்ள ஜனங்களுக்கு நான் ஜெபிப்பதற்கென என்மேல் நீர் அருளியுள்ள ஆசீர்வாதத்தின் நிமித்தம். நான் எங்கு சென்றாலும் அது வியாதியஸ்தருக்காக ஜெபிக்கும் ஒன்றாக அமைந்துள்ளது. தேவனே, இப்பொழுது உதவி செய்யும். ஜனங்களுக்காக இங்கு வைக்கப்பட்டுள்ள உறுமால்களின் விண்ணப்பங்களை நீர் அருள வேண்டுமென்று உத்தமத்துடன் ஜெபிக்கிறேன். உமது இரக்கம் அவர்கள் மேல் தங்கியிருப்பதாக. 17கர்த்தாவே, ஜெபம் ஏறெடுக்கப்படுவதற்கென வெகு தூரத்திலிருந்து விமானத்தில் இங்கு பறந்து வந்துள்ள ஒரு ஸ்திரீயை சகோதரி ஹிக்ஸ் இங்கு கொண்டு வந்திருக்கிறாள் என்று கேள்விப்படுகிறோம். அந்த ஸ்திரீக்கு புற்றுநோய் உள்ளது. அவளை இங்கு வரச்சொல்லலாமா என்று சகோதரி ஹிக்ஸ் அறிய விரும்பினாள். தேவனே, அந்த ஸ்திரீயின் உயிரைக் காப்பாற்றுவீராக. என் சிறு மருமகன் மிக்கி, அதிக ஜுரத்தினால் வாந்தியெடுத்து படுக்கையில் கிடக்கிறான். இப்பொழுது தான் அவனுடைய அறையை விட்டு வெளிவந்தேன். நாங்கள் அங்கு ஏறெடுத்த விசுவாசமுள்ள ஜெபத்தின் விளைவாக அதை நிறுத்தி விட்டீர் என்று விசுவாசிக்கிறேன். அதற்காக உமக்கு நன்றியுள்ளவனாயிருக்கிறேன். நான் அறையை விட்டு வெளிவரும் முன்பு ஜுரம் அந்தப் பையனை விட்டுப் போனதை உணர்ந்தேன். இப்பொழுதும் கர்த்தாவே... இவை எல்லாவற்றிற்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறோம். உமது வார்த்தையின் பேரில் பேசுவது என்மேல் விழுந்த கடமையாயுள்ளது. கர்த்தாவே, உமது வார்த்தையை எங்களுக்கு தாரும். 'உமது வசனமே சத்தியம்.' எங்கள் ஆத்துமாக்களை நீர் ஆசீர்வதித்து எங்களுக்கு தேவையாயுள்ள கிருபையை நீர் அளித்து, இன்றிரவு நாங்கள் தாமே வார்த்தையிலுள்ள தேவனுடைய வாக்குத்தத்தத்தை கிரகித்துக் கொண்டு, இந்த வாரம் பூராவும் அது எங்களுக்கு பெலத்தைக் கொடுக்க அருள் புரியும். இந்த தீரமான ஆத்துமாவாகிய எங்கள் போதகரையும், அவருடைய மனைவியையும் பிள்ளைகளையும், டீகன்மார்களையும், தர்ம கர்த்தாக்களையும், இந்த கட்டிடத்தின் உள்ளேயும் வெளியேயும் உள்ள ஒவ்வொரு நபரையும் ஆசீர்வதிப்பீராக. பிதாவே, இதை அருளும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்த ஆசீர்வாதங்களைக் கோருகிறோம். ஆமென். 18கர்த்தருடைய புத்தகத்திலிருந்து இப்பொழுது இரண்டு பாகங்களை வாசிக்க விரும்புகிறேன். முதலாவதாக சங்கீதங்களின் புத்தகத்திலிருந்து வாசிக்கப் போகிறேன், 86ம் சங்கீதம், அதன் பிறகு பரி. மத்தேயு 16ம் அதிகாரம், 1 முதல் 3வசனங்கள். இந்த சங்கீதம் முழுவதையும் நான் வாசிக்கப்போவதில்லை, அதன் ஒரு பாகம் மாத்திரமே, 11ம்வசனம் முடிய. அது அந்த சங்கீதத்தின் பாதியில் சிறிது கூடுதல். நான் பிரசங்கிப்பதற்கு முன்பு, என் பொருளை அறிவிக்க விரும்புகிறேன்: இணையும் நேரமும் அடையாளமும் அது சிக்கலாக ஒலிக்கிறது. இணையும்; பாருங்கள்? நேரம்; இணையும் நேரம், அதுதான் இப்பொழுது நடந்து வருகிறது. அந்த இணையும் நேரத்தின் அடையாளம். 19தாவீது ஏறெடுத்த ஜெபமாகிய அந்த சங்கீதத்தில் 86ம் சங்கீதம். கர்த்தாவே, உமது செவியைச் சாய்த்து, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்; நான் சிறுமையும் எளிமையுமானவன். என் ஆத்துமாவைக் காத்தருளும், நான் பக்தியுள்ளவன்; என் தேவனே, உம்மை நம்பியிருக்கிற உமது அடியேனை நீர் இரட்சியும். ஆண்டவரே, எனக்கு இரங்கும், நாடோறும் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன். உமது அடியேனுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும் ஆண்டவரே, உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன். ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர் மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர். கர்த்தாவே, என் ஜெபத்திற்குச் செவிகொடுத்து, என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கவனியும். நான் துயரப்படுகிற நாளில் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன். நீர் என்னை கேட்டருளுவீர். (ஓ, அது மிகவும் அழகல்லவா? நீர் என்னைக் கேட்டருளுவீர்). ஆண்டவரே, தேவர்களுக்குள்ளே உமக்கு நிகருமில்லை; உம்முடைய கிரியைகளுக்கு ஒப்புமில்லை. ஆண்டவரே, நீர் உண்டாக்கின எல்லா ஜாதிகளும் வந்து, உமக்கு முன்பாகப் பணிந்து, உமது நாமத்தை மகிமைப்படுத்துவார்கள். தேவரீர் மகத்துவமுள்ளவரும் அதிசயங்களைச் செய்கிறவருமாயிருக்கிறீர்; நீர் ஒருவரே தேவன். (இதைக் கவனியுங்கள்!) கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதியும். நான் உமது சத்தியத்திலே நடப்பேன். நான் உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும் (இணைப்பு பாருங்கள்?)... நான் உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும். சங். 86:1-11 20இப்பொழுது நான் இணையும் நேரத்தையும் அடையாளத்தையும் குறித்து பேசிக்கொண்டிருக்கிறேன். பரி. மத்தேயு 16ம் அதிகாரத்தில். பரிசேயரும் சதுசேயரும் அவரைச் சோதிக்கும்படி அவரிடத்தில் வந்து: வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைத் தங்களுக்குக் காண்பிக்க வேண்டும் என்று கேட்டார்கள். அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: அஸ்தமனமாகிறபோது, செவ்வானமிட்டிருக்கிறது, அதினால் வெளிவாங்கும் என்று சொல்லுகிறீர்கள். உதயமாகிறபோது, செவ்வானமும் மந்தாரமாயிருக்கிறது. அதினால் இன்றைக்குக் காற்றும் மழையும் உண்டாகும் என்று சொல்லுகிறீர்கள். மாயக்காரரே, வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்கு தெரியுமே, காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா? மத் 16:1-3 வாசிக்கப்பட்ட இந்த வசனங்களுடன் தேவன் தமது கிருபையுள்ள ஆசீர்வாதங்களைக் கூட்டுவாராக. 21இப்பொழுது நாம் இணையும் நேரத்தையும், அந்த இணையும் நேரத்தின் அடையாளத்தையும் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறோம். பாருங்கள், கடைசியாக நாம் வாசித்த அந்த வேதபாகத்தில், காலங்களின் அடையாளங்களை நிதானிக்க முடியாததற்காக இயேசு குருவானவர்களை கடிந்து கொள்கிறார். நாம் வாழும் காலத்திற்கென அடையாளத்தை நிதானிப்பதென்பது மக்களுக்கு எப்பொழுதும் ஒரு முக்கியமான செயலாக அமைந்து வந்துள்ளது (பாருங்கள்?); ஏனெனில் தேவன் அதை வெளிப்படையாக எழுதுகிறார், அதை காணாமல் யாருமே தப்பமுடியாது. 22வழக்கமாக நான் வேதாகம காலத்திலுள்ள ஊழியக்காரர்களிலிருந்து தொடங்குவதுண்டு (நோவாவின் காலத்திலிருந்த அடையாளம், தானியேல் காலத்திலிருந்த அடையாளம் போன்ற வெவ்வேறு அடையாளங்கள்). ஆனால் நேரத்தை அதிகம் செலவிடாமலிருக்க அவைகளையெல்லாம் இன்றிரவு விட்டுவிட விரும்புகிறேன்... ஆனால், தாங்கள் வாழும் காலம் என்னவென்று அறிந்துகொள்ள அக்காலத்து இயற்கை அடையாளத்தைக் கொடுப்பதே தேவனுடைய முறையாக எக்காலத்தும் அமைந்து வந்துள்ளது. இந்த பரிசேயர்கள் தாங்கள் வாழும் காலம் என்னவென்பதை அறிந்து கொண்டிருக்க வேண்டும். இயேசு மற்றொரு இடத்தில், ''என்னை அறிந்தீர்களானால், என் நாளையும் அறிந்திருப்பீர்கள்'' என்றார். பாருங்கள்? நாம் அறிந்து கொள்வதென்பது மிகப்பெரிய காரியம். பாருங்கள், அறிந்து கொள்ளுதல் இல்லையென்றால்! 23அப்படித்தான் அவர்கள் தீர்க்கதரிசிகளைக் குறிப்பிட்டனர். அதாவது, ''தீர்க்கதரிசி கர்த்தரிடத்திலிருந்து வந்த தரிசனங்களினால் அறிந்து கொள்கிறான். கர்த்தருடைய வார்த்தை தீர்க்கதரிசிகளுக்கு உண்டானது'' என்று பாருங்கள், தீர்க்கதரிசிகள் உரைக்கும் தேவனுடைய வார்த்தையின் மூலம் அவர்கள் அறிந்து கொள்கின்றனர். தீர்க்கதரிசிகள் ஒரு அடையாளத்தை கொடுக்கின்றனர். உதாரணமாக ஒரு தீர்க்கதரிசி ஒருபக்கம் நீண்ட நாட்களாக படுத்து, அதன்பிறகு மறுபக்கம் ஒருக்களித்து படுக்கிறான். வேறொருவன் தன் உடைகளை களைந்தான். ஓ, அவர்கள் வாழ்ந்த காலத்துக்கான அடையாளத்தைக் காண்பிப்பதற்கென அநேக காரியங்களைச் செய்தனர். வானத்தையும் பூமியையும் படைத்த தேவன்; தமது கிரியைகளை தெளிவாக அமைத்து, தமது காலத்தை ஒரு அடையாளத்தின் மூலம் காண்பிக்கும் தேவன் இன்றைக்கும் ஜீவிக்கிறார் என்று இப்பொழுது நாம் அறிந்திருக்கிறோம். எனவே நாம், ஏதோ ஒன்று... நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தை நோக்கும்போது, யாரோ ஒருவர் ஏதோ ஒன்றை எங்கோ கவனியாமல் உதறித்தள்ளி விட்டிருக்க வேண்டும். பாருங்கள்? ஏனெனில் தேவன் நாம் அறிந்து கொள்வதற்கென நமக்கு ஒரு திட்டவட்டமான அடையாளத்தை கொடுக்காமல், இவைகள் நடக்க அனுமதிக்கமாட்டார். 24இன்றைய குருமார்களும் அவ்வாறே உள்ளனர். நாம் காலத்தை சரிவர நிதானிப்பதில்லை. அன்று போலவே இன்றும் உள்ளது. அதுதான் அந்த நேரம் என்று அவர்கள் நினைக்கவில்லை. அவர்கள் சமாதானத்துடன் வாழ்ந்து வந்ததாக எண்ணினர். எனவே அவர்கள் மேசியாவை எதிர்நோக்கியிருக்கவில்லை. இயேசு தமது வருகை இரவில் திருடன் வருகிறவிதமாய் இருக்கும் என்றுரைத்தார். அவருடைய வருகையைக்குறித்து ஜனங்கள் அறியாமலே இருப்பார்கள். ஆனால் சில கன்னிகைகள் அவரைச் சந்திக்கச் சென்றனர். அவர்களில் பாதி பேருக்கு தங்கள் தீவட்டிகளில் எண்ணெய் இருந்தது. அவர்கள் ஆயத்தமாயிருந்தனர். அவர்கள் அந்த அடையாளத்துக்காக விழிப்புடன் நோக்கியிருந்தனர். அவர்களிடம் தான் இன்றிரவு நான் பேசிக்கொண்டிருக்கிறேன் (பாருங்கள்?) - அந்த அடையாளத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு, அவருடைய வருகையின் அடையாளத்தை. 25கர்த்தரால் அளிக்கப்பட்ட இந்த அடையாளங்கள், விசுவாசிகளுக்கே அளிக்கப்படுகிறது. அவிசுவாசிகள் அதை காணவே மாட்டார்கள். அது அவர்கள் தலைக்குமேல் சென்றுவிடுகிறது. அவர்கள் அதைக் காண்பதில்லை. உங்களை இப்பொழுது நான் காண்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மையாக கர்த்தருடைய தூதன் இன்றிரவு மேடையின் மேல் நின்று கொண்டிருக்கக்கூடும். நீங்கள் அதைக் காணமுடியும், ஒருக்கால் நான் அதைக் காணாமலிருக்கலாம். அல்லது நான் அதைக் காணமுடியும். நீங்கள் அதை காணாமலிருக்கலாம். அது வேதபூர்வமானது என்று உங்களுக்கு தெரியும். அது முற்றிலும் உண்மை. அவர்கள் கண்டனர்... பவுல் தரையிலே விழுந்தான் என்று உங்களுக்குத் தெரியும். ஆனால் அவர்கள்..... அவனுடன் கூட இருந்த ஒருவருமே அந்த ஒளியைக் காண முடியவில்லை. 26யோவன் ஸ்நானன், குருமார்களும் பெரியவர்களும் கொண்ட ஆயிரக்கணக்கானோர் முன்னால் நதிக்கரையில் நின்றபோது அந்த ஒளி அங்கிருந்தது. தேவ ஆவியானவர் புறாவைப்போல் இயேசுவின் மேல் இறங்கி வந்ததாகவும், ஒரு சத்தம், “இவர் என்னுடைய நேசக்குமாரன், இவரில் வாசமாயிருக்க பிரியமாயிருக்கிறேன்'' என்று உரைத்ததாகவும், யோவான் தானே சாட்சி கொடுத்தான். ஆனால் யோவானைத் தவிர வேறு யாரும் அதைக் காணவில்லை. பாருங்கள்? அது அவனுக்காகவே. சாஸ்திரிகள் பெற்ற அடையாளம் என்ன செய்ததென்று கவனித்தீர்களா? அவர்கள் பார்த்தபோது, அங்கு.... அவர்கள் எபிரெயர்கள். அவர்கள் உண்மையில் இந்திய வான சாஸ்திரிகள் அல்ல, அவர்கள் எபிரெயர்கள். அவர்கள் வானசாஸ்திரம் பயின்று தாங்கள் கல்வியை முடிக்க அந்த தேசத்துக்கு சென்றிருந்தனர். அவர்கள் எருசலேமை நோக்கினபோது, அவர்கள் தோன்றின காம், சேம், யாப்பேத் வம்சங்களின் நட்சத்திரங்கள் தங்கள் சுழற் பாதையில் சென்று கொண்டிருக்கக் கண்டனர். அந்த நட்சத்திரங்கள் ஒரே வரிசையில் வரும்போது, மேசியா பூமியில் இருப்பார் என்பதற்கு அதுவே அவர்களுக்கு அடையாளமாயிருந்தது. 27ஓ, என்னே! ''அவர் எங்கே? யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு அவரைப் பணிந்து கொள்ள வந்திருக்கிறோம். அவர் எங்கே?'' என்று - அவர்கள் கேட்டு வந்ததில் வியப்பொன்றுமில்லை. குழந்தை மேசியா எங்கோ ஓரிடத்தில் படுத்திருக்கிறார் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். ஏனெனில் தேவனும் மனிதனும் ஒன்றாக இணைகின்றனர் என்னும் அக்காலத்துக்கான அடையாளத்தை தேவன் அவர்களுக்குத் தந்தருளினார். என்னே ஒரு இணைப்பு! தேவன் தம்மை மானிட சரீரத்தில் இணைத்துக் கொண்டார் என்பது. தேவன் தம்மை மனிதனுடன் இணைத்துக் கொண்டதே இதுவரை நடந்த இணைப்புகள் அனைத்திலும் மிகப்பெரிய இணைப்பாகும். அவர் தேவனாயிருப்பதை விட்டு அகன்று தமது கூடாரத்தைப் பரப்பி மானிட சரீரம் பூண்டு, அந்த இணைப்பின் மூலம் மானிடரில் ஒருவரானார். அது என்ன செய்தது? அது தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே என்றென்றைக்கும் சமாதானத்தைக் கொண்டு வந்தது. அதற்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம்! 28அடையாளங்கள் வெறுமனே அனுப்பப்படவில்லை... இப்பொழுது சற்று யோசித்துப் பாருங்கள். அக்காலத்திலிருந்த ஒவ்வொரு மனிதனுக்கும், எல்லா வான சாஸ்திரிகளுக்கும் நட்சத்திரங்களே கடிகாரமாக அமைந்திருந்தன. ஒரு ஜாமக்காரன் இருந்தான். அவன் கோபுரத்தின் மேலேறி கவனித்துக் கொண்டிருப்பான். ஒரு குறிப்பிட்ட நட்சத்திரம் தன் பாதையில் வந்து கொண்டிருக்கும்போது அது ஒரு குறிப்பிட்ட நட்சத்திரக் கூட்டத்தை அடைந்தால், அது என்ன நேரம் என்பதை அவன் அறிந்து கொள்வான், ''ஜாமக்காரனே, இரவு எவ்வளவு சென்றது?'' என்னும் வேத வசனம் ஞாபகமுள்ளதா? ஜாமக்காரன் திரும்பி வந்து அது எந்த மணி நேரம் என்று சொல்வான். பாருங்கள், அவர்கள் நட்சத்திரங்களின் மூலம் மணியைக் கணக்கிட்டனர். இந்த நட்சத்திரங்கள் ஒரே வரிசையில் உள்ளதை மூன்று பேர் மாத்திரம் கண்டனர், மற்றவர் எவரும் காணவில்லை என்பது விசித்திரமல்லவா? பாருங்கள்? அவை பரிபூரணமாக ஒரே வரிசையில் அமைந்திருந்தன. நீங்களும் வேதாகமத்துடன் உங்களை ஒரே வரிசையில் அமைத்துக் கொள்ளலாம். பாருங்கள்? இந்த நட்சத்திரங்கள் இந்த நட்சத்திரக் கூட்டத்தில் தங்களை ஒன்றாக இணைத்துக் கொண்ட அதே நேரத்தில், மூன்று மனிதர்களும் ஒன்றாக இணைந்தனர். நீங்களும் தேவனுடன் அவருடைய வார்த்தையில் இணையும் போது இவையனைத்தும் உங்களுக்கு தத்ரூபமாக இருக்கும். இவைகளை நீங்கள் கண்டு இவை உண்மை என்பதை அறிந்து கொள்வீர்கள். பாருங்கள்? காலத்தின் அடையாளம் நீங்கள் அது உங்கள் தலைக்கு மேல் போகவிட்டு, “ஆ, முட்டாள் தனம்'' என்று கூறலாம். 29ஆனால் வார்த்தையுடன் இணைந்திருக்கும் உங்களுக்கு அது முட்டாள் தனம் அல்ல. சகோ. பாட், இந்த அடையாளம் விசுவாசியுடன் இணைவதை நீங்கள் காணும்போது, அது முற்றிலும் உண்மையாகின்றது. இதை நான் விசுவாசிக்கு மாத்திரமே கூறிக்கொண்டிருக்கிறேன். ஏனெனில் அவிசுவாசி இதை ஒருக்காலும் காணமாட்டான். அவர் இன்று பூமியில் இருப்பாரானால், இந்த அடையாளத்தை கண்டு கொள்ளக் கூடாத நமது குருமார்கள் அநேகருக்கு அது எப்படிப்பட்ட கடிந்து கொள்ளுதலாக அமைந்திருக்கும்! இந்த அடையாளங்களை நாம் தினந்தோறும் இந்த கூடாரத்தில் கண்டுகொண்டு, இவைகளைக் காண்கிறோம். மற்றவர் இந்த அடையாளத்தை படிக்கின்றனர். சுவற்றில் எழுதப்பட்ட கையெழுத்தைக் காண்கின்றனர். இருப்பினும் அநேகர் அதை அசட்டை செய்து அதைக் காணத் தவறுகின்றனர். அவர்களுக்கு அது ஒன்றுமேயில்லை. அவர்கள் அதை கவனிப்பதில்லை. 30இப்பொழுது கவனியுங்கள், அவர் அவர்களுக்கு ராஜ்ய சம்பந்தமான அடையாளங்களைச் சுட்டிக்காண்பித்தார். அவர்கள் இதைக்குறித்து அவரைக் கேட்டபோது, அடையாளங்களைக் காண வேண்டுமென்று விரும்பினர். அவர் ஏற்கெனவே நடந்த அடையாளங்களை அவர்களுக்குக் கொடுத்தார். உலகத்தின் முடிவு எப்பொழுது நடக்குமென்றும், உலகத்தின் முடிவுக்கான அடையாளம் என்னவென்றும் அவர்கள் அறிய விரும்பினர். அவர் ராஜ்ய சம்பந்தமான அடையாளங்களையும், வானத்தில் தோன்றும் அடையாளங்களையும், பூமியில் தோன்றும் அடையாளங்களையும் வேதாகமத்திலிருந்து பல இடங்களில் எடுத்துக் காண்பித்தார். அவர் அவர்களுக்கு அடையாளங்கள், அடையாளங்கள், அடையாளங்கள், சதா அடையாளத்தைக் கொடுத்துக் கொண்டே வந்தார்... ஓரிடத்தில் அவர் ராஜ்ய சம்பந்தமான அடையாளத்தை அவர்களிடம் கூறினார். அவர், ''எருசலேம் ராஜ்யங்களால் (பாருங்கள்?) - சேனைகளால் - சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள்'' என்றார். 31இது நடப்பதற்கு முன்பு, தேவன்... உலகம் இணைய வேண்டியதாயிருந்தது. யூதர்கள் தேவனால் அளிக்கப்பட்ட அக்காலத்துக்கான அடையாளத்தைப் புறக்கணித்த பிறகு, தீத்து என்னும் அந்த சிறந்த ரோம தளபதி தன் சேனைகளை ஒன்றாக இணைத்து எருசலேமை சூழ்ந்து அந்த பட்டினத்தை கைப்பற்றினான். தேசம் தேவனுடைய ஜனங்களுக்கு விரோதமாக தன்னை இணைத்துக் கொள்வதற்கு முன்பு, தேவனுடைய ஜனங்கள் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்கள் தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாக முதலில் இணைய வேண்டும். எனவே, இணைப்பு ஒன்றாக இணைதல். நாம் ஒரு மகத்தான இணைப்பின் நேரத்தில் வாழ்ந்து வருகிறோம் என்று நம்புகிறேன். இந்த சிகப்பு விளக்குகளை நான் எடுத்து 'சிக்னல்களை' காண்பிக்கிறேன் (பெண்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்றும், ஆண்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்றும், சபைகள் எவ்வாறு நடந்து கொள்கின்றன என்றும்) - இந்த தீர்க்கதரிசின நேரத்தில் நாம் தேவனுடைய வார்த்தையின் வரிசையில் வந்து, கர்த்தராகிய இயேசுவின் வருகைக்கு முன்பு நாம் ஒன்றாக இணைந்து ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறோம் என்பதை என் முழு இருதயத்தோடும் இந்த சிறு கூட்டத்துக்கு காண்பித்து வருகிறேன். 32இப்பொழுது, பாருங்கள், தீத்து ராஜ்யங்களை... தன் சேனைகளை ஒன்றாக இணைப்பதற்கு முன்பு, இஸ்ரவேல் தேசம் தன்னை ஒன்றாக இணைத்துக் கொண்டு, இயேசு மேசியா என்று விசுவாசிப்பதில்லை என்று அறிவித்தது. அவர்கள் அவரைப் புறக்கணித்து, துரத்திவிட்டு, அவரை சிலுவையில் அறைந்தனர். அவர்களுக்கு அனுப்பப்பட்ட இரட்சிப்பைப் புறக்கணிக்க அவர்கள் ஒன்றாக இணைய வேண்டியிருந்தது (அந்த நேரத்துக்கான செய்தியை புறக்கணிப்பதற்கென தங்களை ஒன்றாக இணைத்துக் கொள்ளுதல் என்பதை மனதில் கொள்ளுங்கள்). அவர்கள் அதை செய்ய வேண்டியிருந்தது. அவர்கள் அதை செய்தபோது, தேச சம்பந்தமான அடையாளம் வந்தது. தேசங்கள் ஒன்றாக தங்களை இணைத்துக் கொண்டன, ரோமர்களும் கிரேக்கர்களும் கொண்ட இந்த பெரிய சேனையை தீத்து கொண்டு வந்து எருசலேமின் மதில்களை சூழ்ந்து கொண்டு, ஜனங்களை உள்ளே அடைத்து, பட்டினியால் சாகும்படி செய்தான். அவர்கள் மரங்களின் பட்டையை தின்னதாக சரித்திரக்காரன் ஜோசிபஸ் கூறியுள்ளான். அவர்கள் தரையில் விளைந்த புல்லைத் தின்றனர். அவர்கள் ஒருவர் பிள்ளைகளை மற்றவர் வேகவைத்து தின்றனர். பாருங்கள், அவர்கள் பைத்தியக்காரராகி விட்டனர். தீத்து எருசலேமைச் சுற்றிலுமிருந்த மலைகளின்மேல் உட்கார்ந்து கொண்டிருந்தான். சேனைகள் எருசலேமை நோக்கி அணிவகுத்து வந்த அந்த வேளையில், அவர்கள் தேவனுடைய சித்தத்தை செய்து கொண்டிருந்ததாக எண்ணியிருந்தனர். அதைக்குறித்து அந்த பெரிய ஆண்டவர் கர்த்தராகிய இயேசு அவர்களிடம் கூறினதை அவர்கள் செவிகொடுக்க மறுத்துவிட்டனர். 33அந்த முற்றுகையின்போது, ஒரு கிறிஸ்தவனும் கூட உள்ளே அகப்பட்டுக் கொள்ளவில்லை. ஏனெனில் அவர்கள் அடையாளத்தைக் கண்டு வெளியே சென்றுவிட்டனர். பாருங்கள்? இயேசு, ''வீட்டின் மேல் இருக்கிறவன் இறங்காதிருக்கக்கடவன். வயலில் இருக்கிறவன் தன் வஸ்திரங்களை எடுப்பதற்கு திரும்பாதிருக்கக் கடவன். யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக் கடவர்கள். நீங்கள் ஓடிப்போவது மாரி காலத்திலாவது, ஒய்வு நாளிலாவது சம்பவியாதபடிக்கு வேண்டிக் கொள்ளுங்கள்'' என்றார். ஏனெனில் மாரி காலத்தில் மலைகள் பனியினால் நிறைந்திருக்கும். ஓய்வு நாளில் பட்டின வாசல் அடைபட்டிருக்கும். அப்படி நிகழ்ந்தால் அந்த நிலையில் அவர்கள் மாட்டிக் கொள்வார்கள். பாருங்கள்?கர்த்தருக்கு சித்தமானால், அதைக்குறித்து நாம் விரைவில் பேச விரும்புகிறோம்..... எப்படி தேவன் அவைகளைச் செய்கிறார் என்று. 34இப்பொழுது கவனியுங்கள், அவர்.... அப்படி சம்பவிக்கக் கூடாதென்று அவர்கள் வேண்டிக் கொண்டனர். அவர்கள் அதற்காக வேண்டிக் கொள்ள வேண்டுமென்று தேவன் அவர்களிடம் கூறியிருந்தார். அவர்கள் ஒருவராகிலும் உள்ளே மாட்டிக் கொள்ளவில்லை. அவர்கள் புறப்பட்டு சென்றுவிட்டனர். அவர்கள் அந்த அடையாளத்தைக் கண்டு வெளியே சென்றுவிட்டனர். அவ்வளவுதான். ஓ, நாம் வாழும் இந்நேரத்துக்கான அடையாளத்தை சபைகள் இன்று காணவேண்டியது எவ்வளவு முக்கியம் வாய்ந்தது! உங்களால் இயன்றவரை ஜீவன் தப்ப வேகமாக கல்வாரிக்கு ஓடிச்செல்லுங்கள்; ஒரு சபையினிடமல்ல, இயேசு கிறிஸ்துவினிடம். உங்களை அவருடன் இணைத்துக் கொள்ளுங்கள், ஏதோ ஒரு ஸ்தாபன சபையுடனோ அல்லது சபை கோட்பாட்டுடனோ அல்ல. கிறிஸ்துவினுடன் இணைந்து கொள்ளுங்கள். அது அவர் என்பதை நிச்சயமாய் அறிந்திருங்கள். நீங்கள் ஏதோ ஒன்றை ஏற்றுக்கொள்ளக் கூடாது. அது அவர் என்பதை நிச்சயமாய் அறிந்திருக்கவேண்டும். என்னே ஒரு இணைப்பின் நேரம்! 35அவர்கள் இயேசுவை புறக்கணித்து, தங்களை ஒன்றாக ஒரு சங்கமாக இணைத்துக் கொண்டு, இயேசுவை தீர்க்கதரிசியாக ஏற்றுக்கொள்பவன் எவனும் சபை பிரஷ்டம் செய்யப்படுவான் என்று தங்களுக்குள்ளே அறிவித்துக் கொண்டதாக நாம் காண்கிறோம். பார்வையில்லாத அந்த குருடன் அங்கு உட்கார்ந்து கொண்டிருந்தது உங்களுக்கு ஞாபகமுள்ளதா? அவருடைய சீஷர்கள், “இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ''? என்று கேட்டார்கள். இயேசு, “இந்த விஷயத்தில், இவர்கள் இருவர் செய்த பாவமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும் பொருட்டு இப்படிப் பிறந்தான்'' என்றார். அவன் பார்வையடைந்த வகை அவர்களுக்குத் தெரியாதென்று பெற்றோர் கூறினரென்று ஞாபகமிருக்கட்டும். அவர்கள், “இவன் எங்கள் குமாரன் தான் என்று எங்களுக்குத்தெரியும். ஆனால் அவன் பார்வையடைந்த வகை எங்களுக்குத் தெரியாது'' என்றனர். ஏனெனில் இயேசுவைத் தீர்க்கதரிசி என்று எவனாவது அறிக்கை பண்ணினால் அவனை ஜெப ஆலயத்துக்குப் புறம்பாக்க வேண்டுமென்று யூதர்கள் கூறியிருந்தனர். 36ஆனால், பாருங்கள், தேவனுடைய கிரியைகள் இவனை அந்த கூட்டத்தில் சேர்க்கவில்லை. அவன், ''அவர் என் கண்களைத் திறந்திருந்தும், அவர் எங்கேயிருந்து வந்தவரென்று நீங்கள் அறியாதிருக்கிறது ஆச்சரியமான காரியம்'' என்றான். பாருங்கள்? அவனால் அப்படி கூறமுடிந்தது. அது தேவனுடைய கிரியைகள். அவன் குணமாக்கப்பட்டான். அவன் யாருடனும் சேர்ந்திராத காரணத்தால், அவனால் அப்படி கூறமுடிந்தது. அவன் மீது தேவனுடைய கிரியைகள் செய்யப்பட்டன. அவன் நிச்சயமாக அதை தன் வாழ்க்கையில் முதன் முறையாகக் கண்டான். 37யூதர்கள் இயேசுவுக்கு விரோதமாகவும், அவருடைய மேசியாத் தன்மை, மேசியா செய்திக்கு விரோதமாகவும் தங்களை இணைத்துக் கொண்டனர். இன்று அதுவே நடப்பதை நாம் காண்கிறோம், அதே காரியம். சபையை நிர்மூலமாக்க கம்யூனிஸம் ஒன்றாக இணைகின்றது... செய்தியை - வார்த்தையை - நிர்மூலமாக்குவதற்கென சபைகள் அனைத்தும் உலக சபைகள் ஆலோசனை சங்கத்தில் ஒன்றிணைந்த பிறகு இது நடக்கிறது. சபைகள் வார்த்தையை புறக்கணித்துவிட்டன. அவர்கள் அதை ஏற்று கொள்ள முடியாது. ஏனெனில் அது அவர்களுடைய ஸ்தாபன கோட்பாடுகளுக்கு விரோதமாகவும் அமைந்துள்ளது. எத்தனை அக்கினி ஸ்தம்பங்கள் - ஜனங்கள் நடுவில் தொங்கினாலும்..... எத்தனை காரியங்கள் முன்னுரைக்கப்பட்டு அவை நிறைவேறினாலும், கடைசி நாளுக்கென அவர் வாக்களித்துள்ள எல்லா மகத்தான அடையாளங்களைக் கண்டபோதிலும், அவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. 38எனவே, அவர்கள் இப்பொழுது தங்களை ஒன்றிணைத்துக் கொண்டிருக்கின்றனர். இங்குள்ள உங்கள் போதகரும் அதைக்குறித்து படித்துள்ள அநேகரும்... உலக சபை இயக்கம் உருவாகிறதென்று உங்களிடம் எடுத்துக்கூற முடியும்.... அதற்கு லூத்தரன் போதகர் ஒருவர் தலைவராயிருக்கிறார். அண்டையில் பேராபத்து ஏதாகிலும் விளைந்து, நாம் அந்த சபை இயக்கத்தில் இணையாமல் இருந்தால், நமது சபை இனி சபையாயிராமல், அவர்கள் அதை கிடங்காக உபயோகிப்பார்கள். ஒருவர் மரணத்தருவாயிலிருப்பதை அல்லது அடிபட்டுக் கிடப்பதை சகோதரர்களில் ஒருவர் கண்டு, அவருக்கு ஆவிக்குரிய ஆசீர்வாதம் எதையாகிலும் அளிக்க முற்பட்டால், அதற்காக நாம் சுட்டுக் கொல்லப்படலாம். அது முற்றிலும் உண்மை. நாம் உலக சபை இயக்கத்தில் அங்கத்தினராயிராமல் அப்படிப்பட்ட ஊழியம் செய்வதற்காக நமக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம். மிருகத்தின் முத்திரையை உங்களால் காணமுடிகிறதா? பாருங்கள்? 39இப்பொழுது இணையும் நேரம் வருகிறதை நாம் காண்கிறோம். பாருங்கள்? இப்பொழுது கவனியுங்கள்! சபையானது செய்திக்கு விரோதமாக தன்னை இணைத்துக் கொள்கிறது. அது அப்படி செய்யும்போது நாடுகளும் சபையை அழிப்பதற்கென கம்யூனிஸத்தின் அடிப்படையில் ஒன்றிணைகின்றன. முதலில் எப்படி நடந்ததோ அப்படியே இப்பொழுதும் நடக்கிறது. பாருங்கள்? அது மறுபடியும் நடக்கிறது. இஸ்ரவேல் முதலில் செய்தியை புறக்கணித்தனர். அவர்கள் செய்தியைப் புறக்கணித்த பின்பு, இராணுவம் - மற்ற தேசங்கள் அனைத்தும் - ஒன்றிணைந்து புறப்பட்டு வந்து, சபையை நிர்மூலமாக்கினது. இன்றைக்கும் அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் செய்தியை புறக்கணித்துவிட்டனர். கம்யூனிஸம் உலகத்தை சபைக்கு விரோதமாக இணைக்கும் நேரம் இப்பொழுது வந்துவிட்டது. பாருங்கள், அது அப்படித்தான் நடக்கவேண்டும். அப்படி கூறுவது கடினமாகவே உள்ளது. 40அதை விசுவாசிப்பது யூதர்களுக்கு கடினமாகவே இருந்தது. அவர்கள், ''சகோதரரே, இப்பொழுது வாருங்கள். நமது தேவன் நம்மோடு இருக்கிறார் என்று நாம் அறிந்திருக்கிறோம். நாம் ஆலயத்துக்கு சென்று ஜெபிப்போம். பரிசுத்த பிதா இன்னார் இன்னார் நம்மை ஜெபத்தில் நடத்துவார். வாசலை மூடுங்கள்'' என்றனர். ஆனால் தீத்துவோ தன் சேனைகளுடன் அங்கு வந்து நின்றான். அவன் ஒரு ஆண்டுக்கு மேல் அதை முற்றுகையிட்டு அவர்களை பட்டினியால் வாட்டினான். அவர்களில் ஒருவர் கூட பட்டினத்தை விட்டு வெளிவர முடியவில்லை. அவர்கள் பட்டினியால் செத்தனர். அவன் அங்கு சென்று எருசலேமின் மதில்களை இடித்து, அங்கிருந்த எல்லோரையும் கொன்றபோது இரத்தம் ஆற்று பெருக்காய் ஓடினது. 41அப்படி நடக்குமென்று பழைய ஏற்பாட்டில் கர்த்தருடைய தூதன் தீக்கதரிசனம் உரைத்தார். அதை குருமார்கள் அறிந்து ஜனங்களுக்கு அறிவிக்க வேண்டியவர்களாயிருந்தனர். அப்படி செய்வதற்கு பதிலாக, இயேசு அவர்கள் மத்தியில் நின்றபோது, அவரை அவர்கள் அறிந்து கொள்ளவும் இல்லை. அவர்கள் அவரை ஒரு ஜால வித்தைக்காரனைப் போல் பாவித்து, ''எங்களுக்கு ஒரு ஜாலவித்தை செய்து காட்டும். அதை எப்படி செய்கிறீர் என்று நாங்கள் காணட்டும். எங்களுக்கு ஒரு அடையாளத்தைக் காண்பியும்'' என்றனர். பாருங்கள்? அவர், ''நான்...'' என்றார். அவர் எத்தனையோ காரியங்களை கூறினார். இருப்பினும் அவர்களால் அதை காணமுடியவில்லை. பாருங்கள்? அவர்கள் அவரை புறக்கணித்தபோது..... அக்காலத்து செய்தியை அவர்கள் புறக்கணித்தனர். அவர்கள் அக்காலத்து அடையாளத்தைக் காணத் தவறினர். வேத தீர்க்கதரிசனத்தின் அடையாளம் அவர்களுக்கு முன்பாக செய்யப்பட்டது. அவர்களோ, ''இப்பொழுது நாம் உள்ளே செல்வோம்'' என்றனர். அவர்கள் பரிசுத்த மனிதர்கள். அவர்களுடைய வாழக்கையின் பேரில் உங்கள் விரலை நீட்டி நீங்கள் குற்றப்படுத்தவே முடியாது. அவர்கள் களங்க வாழ்க்கை கொண்டு ஆசாரியர்களாக இருக்க முடியாது. ஒரு சிறு குற்றத்திற்காகவும் ஆசாரியன் கல்லெறிந்து கொல்லப்படுவான். எனவே அவன் சுத்தமான, பரிசுத்தமான வாழ்க்கை வாழவேண்டும். அவன் எந்த குற்றத்தையும் செய்யமுடியாது. ஏனெனில் அவன் எந்த சிறு குற்றத்துக்காகவும் கல்லெறிந்து கொல்லப்படுவான். அவர்கள் மனிதரின் பார்வையில் பெரியவர்கள், பரிசுத்தமுள்ளவர்கள் அவர்கள் உள்ளே சென்று, “இப்பொழுது நாம்... நம்முடன் தேவன் இருக்கிறார். அவர் காலாகாலங்களாக நம்முடன் இருந்து வருகிறார். இப்பொழுது நாம் அவருடைய பரிசுத்த ஆலயத்துக்குள் செல்வோம்'' என்றனர். அது தேவனுடைய பரிசுத்த ஆலயம்! ஆனால் பாருங்கள், அவருடைய பரிசுத்த ஆலயத்திலிருந்து அவர் துரத்தப்பட்டார். பாருங்கள்? ''நாம் கர்த்தருடைய வீட்டிற்குச் செல்வோம். நாம் தெரிந்து கொள்ளப்பட்ட ஜாதி என்று இங்குள்ள எபிரெயர்களாகிய நீங்கள் அனைவரும் அறிவீர்கள். தேவன் நம்முடைய தேவன்; அவர் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் தேவன். அவர் நம்மோடு கூட இருக்கிறார். அவர் விருத்தசேதனமில்லாத இந்த பெலிஸ்தியரின் - அதாவது இந்த ரோமர்கள், கிரேக்கர்கள் - கையிலிருந்து நம்மை விடுவிப்பார். நாம் கர்த்தருடைய வீட்டுக்குப் போவோம் வாருங்கள்'' என்றனர். 42அது நல்லதாக ஒலித்தது. ஆனால் அவர்கள் என்ன செய்தனர்? அந்த வீட்டைக் கட்டினவர் தாழ்ந்த கலிலேய தச்சனாக அங்கிருந்தார். அவர்கள் அவரைப் புறக்கணித்தனர். அந்நேரத்துக்கான அவருடைய செய்தியாளன் என்று தேவன் அவரை உறுதிப்படுத்தின பிறகும், அவர்கள் அவரைப் புறக்கணித்தனர். எனவே அவர்களுடைய ஜெபம். உத்தமம், பலி இவையனைத்தும் தேவனுக்கு ஒன்றுமற்றதாயிருந்தது. அவர்கள் அதை செய்தனர்! தேவனோ அதை நிர்மூலமாக்க இந்த பெரியசேனை ஒன்றிணையும்படி செய்தார். இன்றைக்கு ஸ்தாபன சபைகள் தேவனுடைய வார்த்தையை புறக்கணிப்பதை நாம் காண்கிறோம். இவைகளை அவர்களிடம் கூறுவது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. விஞ்ஞானம் புகைப்படங்களின் மூலம் அதை நிரூபித்த பின்பும், அதை ஏற்றுக்கொள்ள அவர்கள் பிரியப்படவில்லை. எனவே தீத்து செய்ததுபோல, இதை நிர்மூலமாக்க கம்யூனிஸம் உருவாகின்றது. அவர்கள் நிர்மூலமாக்குவார்கள் என்று வேதம் கூறுகின்றது. நிச்சயமாக! 43நாம் எந்த நேரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று காண்கிறீர்களா? இணையும் நேரத்தில். இவை ஒன்றிணைவதை நாம் காணும்போது, ஓ, இவைகளை நாம் காணத் தவறுகிறோம். அவர் வேதத்தில் எங்கு அதை வாக்குத்தத்தம் செய்துள்ளார் என்றும், அவர் என்ன செய்யப்போகிறார் என்றும் நீங்கள் காண்கிறீர்கள். அது நிறைவேறுவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். அவர் சபைக்கு என்ன செய்யப்போகிறார் என்று வேதத்தில் நாம் காண்கிறோம். அது நிறைவேறுவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். தேசங்கள் ஒன்றிணைகிறதை நாம் காண்கிறோம். கம்யூனிஸம் போன்ற கொள்கைகள் ஒன்றிணைவதை நாம் காண்கிறோம். இது இணையும் நேரம். இது இணைந்து கொண்டிருக்கும் மணி நேரம். “நாம் இணைய வேண்டும்” என்பது இக்காலத்து ஆவியாயுள்ளது. நீங்கள் பேசும் எதுவுமே சங்கங்களாக அமைக்கப்பட வேண்டும். அப்பொழுது அரசாங்கம் கூட அதை ஏற்றுக்கொள்ளும். 44உங்களுக்குத் தெரியுமா, குடிமகன் என்னும் முறையில்... அமெரிக்க ஐக்கிய நாடுகளின் குடிமகன் என்னும் முறையில் நான் செய்யமுடியும். இருப்பினும் நான். நீங்கள் எனக்கு ஐந்து டாலர்களுக்கு காசோலை ஒன்றை கொடுத்தால், அதில் என் பெயரை எழுத நான் துணிவு கொள்ளமாட்டேன். பாருங்கள்? பாருங்கள், என்னால் அப்படி செய்ய முடியாது. பாருங்கள், இது இணையும் நேரம். அது ஏதோ ஒரு சங்கத்தின் வழியாக செல்ல வேண்டும். மிருகத்தின் முத்திரையைக் கொண்டு வருவது அந்த சங்கமே. பாருங்கள்? இது இணையும் நேரம், இது அதற்கு நடத்திச்செல்கிறது. அதை உங்கள் கண்களால் நீங்கள் வெளிப்படையாய் காணமுடிகிறது. இது இணையும் நேரம், எல்லாமே ஒன்றிணைகிறது. 45யூதர்கள், இயேசு அவர்களுடைய மேசியா அல்லவென்று அவருக்கு விரோதமாக ஒன்றிணைந்தனர். எனவே என்ன நேர்ந்ததென்று நாம் காண்கிறோம். இப்பொழுதும் அதையே நாம் காண்கிறோம். அதாவது செய்தியை - தேவனுடைய வார்த்தையை - நீர்மூலமாக்கக் கருதி சபையானது உலக சபைகள் ஆலோசனை சங்கத்தில் ஒன்றிணைந்துள்ளன. இப்பொழுது சபையை அழிப்பதற்கு கம்யூனிஸம் ஒன்றிணைகின்றது. சபையானது செய்தியை நிர்மூலமாக்க முயன்றது. அதை அவர்கள் செய்யக்கூடிய ஒரே வழி அவர்கள் ஒருமித்து சங்கம் உண்டாக்கிக் கொள்வதே. அவர்கள் மெதோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், லூத்தரன்கள், பிரஸ்பிடேரியன்கள், கிறிஸ்து சபை போன்ற சிறு சிறு குழுக்களாகப் பிரிந்திருந்தால் அவர்கள் ஒன்றுமே செய்யமுடியாது. ஏனெனில் இந்தக் குழு அந்தக் குழுவுக்கு விரோதமாக அமைந்திருக்கும். கிழக்குக்கும் மேற்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர்களுடைய உபதேசத்தில் வேற்றுமை உள்ளது. பாருங்கள், அவர்களால் செய்யமுடியாது. ஆனால் ஒரு பெரிய தலைவனின் கீழ் அவர்கள் ஒன்றிணையும்போது, அவர்கள் செய்வார்கள். அப்பொழுது அவர்கள் செய்வார்கள். 46அங்கு தான் கத்தோலிக்கர்கள் ஒன்றிணைந்துள்ளனர். ரோமன் கத்தோலிக்கர்கள், அவர்கள் ஒருமித்துள்ளனர்..... பெரும்பான்மையோர் ரோமன் கத்தோலிக்கர், கிரேக்க சபையும் மற்ற கத்தோலிக்கர்களும் ரோமன் கத்தோலிக்கரைப்போல் அவ்வளவு அதிகம் பேர் அல்ல. அவர்கள் ஒன்றிணைந்துள்ளனர். ஆகையால் தான் அவர்கள் ஒன்றாக நிற்கின்றனர். என்ன நடந்தபோதிலும், போப் எல்லாவற்றிற்கும் தலைவன், பாருங்கள்? யார் என்ன கூறினபோதிலும், “போப் பிழையற்றவர்; அவர் தேவனின் பிரதி குரு (vicar) அவர் தேவனுக்கு அடுத்தவர். அவருக்கு நரகம், பரலோகம், பாவ விமோசன ஸ்தலம் ஆகியவைகளின் மேல் ஆதிக்கம் உண்டு''. பாருங்கள்? எனவே அந்த விஷயத்தில் ஒன்றுமே செய்ய முடியாது. அவர் என்ன கூறுகிறாரோ, அதுவே முடிவானது. 47இப்பொழுது பிராடெஸ்டெண்டுகளும் அதுபோன்று தங்களுக்கு ஒரு தலைவனை உண்டாக்கிக் கொண்டிருக்கின்றனர். மிருகத்துக்கு ஒரு சொரூபம் (image) பண்ணப்பட்டதாக வேதம் கூறுகிறது சொரூபம் என்றால் என்ன? அதைப் போலவே வேறொன்று செய்யப்படுவதே சொரூபம். பார்த்தீர்களா, அதே தான், அது எப்படி பண்ணப்படுகிறது? தங்களை ஒன்றிணைப்பதன் மூலம். ஒன்றிணைதல் இக்காலத்து ஆவியாயுள்ளது. இப்பொழுது ஒன்றிணைந்து செய்தியை நிர்மூலமாக்க முனைகின்றனர். அவர்கள் எப்படி அதை நிர்மூலமாக்கினர்? அவர்களால் தேவனுடைய வார்த்தையை எப்படி நிர்மூலமாக்க முடியும்? அவர்கள் துவக்கத்தில் செய்தது போன்றே, மனிதருடைய கற்பனைகளை ஏற்றுக்கொண்டு, தேவனுடைய வார்த்தையை அவமாக்கிப் போட்டனர். பாருங்கள், அவர்கள், ''ஆ அது.... உண்மையில் அது...'' இந்த நாத்தீக பெண் என்ன செய்ய முயன்றாள் என்று பார்த்தீர்களா...... அவள்...... அவளுடைய பெயர் எனக்கு இப்பொழுது மறந்துவிட்டது. எனக்கு மாத்திரம் அது ஞாபகமிருந்தால். அவள்..... நான் எத்தனையோ காரியங்களை நினைத்துப் பார்க்க முயல்கிறேன். 48அன்றொரு நாள் நான் குமாரி நேஷன்சைக் குறித்து யோசித்துக் கொண்டிருந்தேன்.... அவளைப் போன்ற வேறொருத்தி எழும்பினால் நலமாயிருக்கும். அவள் மது அருந்தும் இடங்களுக்குச் சென்று, விஸ்கி குப்பிகளை எறிந்து, அங்கிருந்த ஆபாசமான படங்களைக் கிழித்தெறிந்தாள். இன்றைக்கு ஏன் ஒரு பெண் அவ்வாறு எழும்பி அங்கு சென்று, அவளுடைய இனத்தைச் சேர்ந்த பெண்களின் நிர்வாணப்படங்களைக் கிழித்தெறியக்கூடாது? பாருங்கள், இப்பொழுதெல்லாம் யாருமே அப்படி செய்வதில்லை. 49இந்த நாத்தீக பெண், “வேதாகமத்தை பொதுவான பள்ளிக் கூடங்களில் படிப்பது சட்ட விரோதமானது'' என்று கூறினாள். இவர்களும் கூட.... நீங்கள் கவனித்தீர்களா, வேத ஆராய்ச்சி நிபுணர்கள், “வேதத்தில் கூறப்பட்டுள்ள பெரும்பாலான தீர்க்கதரிசனங்கள் முற்றிலும் தவறு, அவை நிறைவேறவேயில்லை'' என்று கூறுகின்றனர். நீங்கள் அதைக்குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள். அதை படித்திருப்பீர்கள். அவர்கள் இப்படிப்பட்ட எல்லாவற்றையும் கூற முனைந்தனர். பாருங்கள். வார்த்தையின் வல்லமையை அவர்கள் நிர்மூலமாக்க முயல்கின்றனர். அவர்கள் மாத்திரம் அதை நிர்மூலமாக்கி அதற்கு பதிலாக மனிதன் வைத்துள்ள கோட்பாடுகளை நுழைத்தால், அவர்களுடைய பார்வையில் அது வார்த்தையைக் காட்டிலும் சிறந்ததாக தென்படுகிறது. அவர்களுடைய பாரம்பரியத்தினால் - ஸ்தாபன அரசியலினால் - அவர்கள் வார்த்தையை நிர்மூலமாக்குகின்றனர். 50ஒவ்வொரு சபைக்கும் தன் சொந்த அரசியல் உண்டு. கிறிஸ்துவின் சபைக்கு தன் சொந்த அரசியல் உண்டு; பாப்டிஸ்டுகளுக்கு மெத்தோடிஸ்டுகளுக்கு, பிரஸ்பிடேரியன்களுக்கு, இவர்கள் அனைவருக்கும் வெவ்வேறு அரசியல் உண்டு. அதன் காரணமாக அவர்கள் பிரிந்திருக்கிறபடியால், அதை விட்டு அவர்கள் விலகுகின்றனர். பாருங்கள், அவர்கள் அதை முன்பு செய்திருக்க முடியாது. அதை இப்பொழுது அவர்கள் செய்தே ஆகவேண்டும். பாருங்கள். இது இணையும் நேரம், அவர்கள் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து அதிலிருந்து என்ன தோன்றும் என்று காண விழைகின்றனர். அது குதிரை இறைச்சியிலிருந்து ரொட்டியை உண்டாக்க முயல்வது போன்றதாகும். டப்பாவிலுள்ள குப்பை, இன்னும் என்னென்ன கிடைக்குமோ அவைகளை ஒன்று சேர்த்து கலக்கி, அதில் அழுகின உருளைக்கிழங்கு களைப்போட்டு, அதிலிருந்து என்ன கிடைக்கும் என்று காண விரும்புகின்றனர். எனக்கு நிச்சயமாக அது ஒன்றும் வேண்டாம். வேண்டாம், ஐயா! அப்படித்தான் அவர்கள் செய்கின்றனர். பாருங்கள், இயேசு ஒரு கட்டுக்கதை என்று நம்புகிறவர்களைக் கொண்ட சபையையும், அவர் ஒரு தீர்க்கதரிசி என்று நம்புகிறவர்களையும் ஒன்று சேர்க்கின்றனர். ஒருவர், ''அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன'' என்கிறார். மற்றொருவர், ''அப்படி ஒன்று இருக்கக்கூடும்'' என்கிறார். 51இப்படிப்பட்டவர்கள் ஒன்றிணைகின்றனர். “இரண்டு பேர் ஒருமனப்பட்டிருந்தாலொழிய நடந்து போவார்களோ?'' என்று வேதம் கூறுகிறது. பாருங்கள்? இப்படிப்பட்ட ஒரு ஒற்றுமையைத்தான் அவர்கள் பெற்றுள்ளனர். அதற்குத் தலைமையாக ஏதோ ஒரு பெரிய பரிசுத்த பிதாவை நியமித்தால், வேதம் கூறியுள்ளது போன்று, மிருகத்துக்கு ஒரு சொரூபத்தை நீங்கள் பெற்றுக் கொள்கிறீர்கள். இப்பொழுது ஒரு லூத்தரன் போதகரை அவர்கள் தலைவராக பெற்றுள்ளனர். நல்லது, இது இணையும் நேரம் என்று நாம் காண்கிறோம். இப்பொழுது கம்யூனிஸம் போன்றவை உலகில் ஒன்றிணைகின்றன, சபைகளும் ஒன்றிணைகின்றன. 52இயற்கையைக் கவனியுங்கள், ஓ, என்னே! நீங்கள் இயற்கையைக் கவனிப்பீர்களானால், அதுவும் அதையே செய்கின்றது. இயற்கை என்பது தேவனுடைய அடையாளங்களின் நாள் காட்டி (Calendar) அது உங்களுக்குத் தெரியுமா? இயேசு இயற்கையை கவனிக்கும்படி கூறினார். கடல் கொந்தளிப்பு உண்டாகும் (பாருங்கள்?) வெவ்வேறு காரியங்கள் சம்பவிக்கும், பல இடங்களில் பூமியதிர்ச்சி உண்டாகும், ராஜ்யத்துக்கு விரோதமாக ராஜ்யம் எழும்பும், வானத்தில் அடையாளங்கள் காணப்படும், பூமியில் அடையாளங்கள் தோன்றும், அவருடைய வருகையின் நேரத்தில் அடையாளங்கள் எங்கும் காணப்படும். மேகங்களைக் கவனியுங்கள். மேகங்கள் புயல் கலந்த மழையைத் தோன்றப் பண்ணுவதற்கு முன்பு என்ன நடக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா? பல சிறு மேகங்கள் ஒன்று சேர்ந்து ஒரு பெரிய மேகம் உருவாகின்றது. இந்த சிறு மேகத்தை காற்றடித்து செல்கிறது. மற்ற சிறு மேகத்தை காற்றடித்துக் கொண்டு செல்கிறது. இவை ஒன்றிணைந்து காற்று பலமாக வீசி புயல் உண்டாகிறது. புயல் உண்டாவதற்கு முன்பு அவை ஒன்றிணைகின்றன. அவை இணைந்தே ஆகவேண்டும். வாத்துகளும் கூஸ்வாத்துகளும் தங்கள் நாட்டை விட்டுச் செல்வதற்கு முன்பு ஒன்றிணைவதை கவனியுங்கள். பாருங்கள்? அவை ஒன்றிணைகின்றன. அவை இந்த குளத்திலிருந்து மற்ற குளத்துக்கு, இங்கிருந்து அங்கு, ஒன்று சேர்ந்து பறப்பதை நீங்கள் காணலாம். அவை பறந்து செல்வதற்கு ஒன்றிணைகின்றன. பாருங்கள், அது.... அது இயற்கை. தேவன் இயற்கையை சிருஷ்டித்தார். இயற்கை தேவனுடைய திட்டத்திற்கேற்ப இயங்குகின்றது. இயற்கை தேவனுடைய விதியின்படி (Law) இயங்குகின்றது. அது எழுதப்படாத தேவனுடைய விதி. 53அடக்க ஆராதனையின்போது அளிக்கப்படும் செய்தியைப்போல். மரத்தின் சத்து பாதாளத்திலுள்ள மரத்தின் வேர்களை அடைந்து, வசந்த காலத்தின் போது உயிரோடெழும்பும் வரைக்கும் அங்கு தங்கியுள்ளது. அது தேவனுடைய விதி. வேறெந்த ஞானமும் சத்தை கீழே கொண்டு செல்லமுடியாது. நீங்கள் அதை கீழே அனுப்பமுடியாது. நீங்கள் அதை வெளியே எடுத்து அனுப்பமுடியாது. தேவனைத் தவிர வேறு யாருமே அதை செய்யமுடியாது. தேவன் பரிபூரணமான ஒரு முறையை வைத்துள்ளார். எனவே இலைகள் உதிரும்போது, அவர் சத்தை பாதாளத்திற்கு அனுப்பி அதை அங்கு ஒளித்து வைக்கிறார். ''நீங்கள் என்னை பாதாளத்தில் ஒளித்து, உமது கோபம் தீருமட்டும் என்னை மறையும்'' என்று யோபு கூறினதுபோல். பாருங்கள்? அது அங்கு செல்கிறது. ஏனெனில் பனிக்கு முன்பு அது அங்கு செல்ல வேண்டும் என்பது இயற்கையின் விதி. அப்பொழுது இலைகள் உதிர ஆரம்பிப்பதைப் பாருங்கள். ஏன்? அது இயற்கையின் விதி. 54வாத்துகள் அனைத்தும் தங்கள் தலைவனின் கீழ் ஒன்று சேருகின்றன. அவை எப்படியோ தங்கள் தலைவனை அறிந்து கொள்கின்றன. அது எப்படி என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஒரு குறிப்பிட்ட ஆண் வாத்து தங்கள் தலைவன் என்று அவை கண்டு கொள்கின்றன. அந்த ஆண் வாத்தை சுற்றி மற்ற வாத்துகள் ஒன்று சேர்ந்து ஆகாயத்தில் எழும்பி பறக்கின்றன. அது... அந்த குளத்தை விட்டு முன்பு அது சென்றதில்லை. ஆனால் அது நேராக லூசியானா, அல்லது டெக்ஸாஸுக்கு, நெல் வயலுக்கு பறக்கிறது. பாருங்கள், அவை தங்கள் வீட்டைவிட்டுப் பறப்பதற்கு முன்பு? அந்த ஆண்டு தான் அவை பிறந்தன - அவை ஒன்று சேருகின்றன. ஆமென். பார்த்தீர்களா? தங்கள் தலைவன் சுற்றி ஒன்று சேருதல். 55இன்றைக்கு மனிதனுக்குள்ள தொல்லை என்னவெனில், அவன் தன் தலைவனை அறியாமலிருக்கிறான். ஆம் ஐயா. அவர்கள் ஒரு ஸ்தாபனத்தில் ஒன்று சேருகின்றனர், ஒரு பேராயர் அல்லது ஒரு மனிதனைச் சுற்றி ஒன்று சேருகின்றனர். ஆனால் அவர்களுடைய தலைவனைச் சுற்றி (அதாவது பரிசுத்த ஆவியையும், வார்த்தையையும் சுற்றி) அவர்கள் ஒன்று சேருவதில்லை. பாருங்கள்? அவர்கள், “ஒ, நான் சிறிது மூட மதாபிமானியாகி விடுவேன் என்று ஐயமுறுகிறேன். நான் தவறான பாதையில் சென்று விடுவேன் என்று ஐயமுறுகிறேன்'' என்கின்றனர். ஓ, பார்த்தீர்களா? சிறு வாத்து தலைவனைப் பார்த்து, ''அது சிறகுகளை வைத்துள்ள விதம் எனக்குப் பிடிக்கவில்லை. எனவே அதை நான் பின் தொடரப் போவதில்லை'' என்று கூறினால் என்ன நடக்கும்? அது குளிரில் உறைந்து செத்துவிடும். நீங்களும் அந்த கூட்டத்துடன் சேர்ந்து பறக்காமல் போனால், அங்கு மாட்டிக்கொண்டு விடுவீர்கள். அது தன்னை ஒன்றிணைத்துக் கொள்கிறது. இயற்கை அப்படி செய்கிறது. கூஸ்வாத்துகள் தங்களை ஒரு தலைவனைச் சுற்றிலும் ஒருங்கிணைத்துக் கொள்கின்றன. அவைகளும் அதையே செய்கின்றன. 56தேனீக்கள் மொய்ப்பதை நீங்கள் கண்டதுண்டா? அவை மொய்ப்பதற்கு முன்பு தங்கள் ராணி தேனியைச் சுற்றிலும் ஒன்று கூடுகின்றன. அது உண்மை. ராணி தேனீ புறப்பட்டுச் செல்லும்போது மற்ற தேனீக்களும் கூட செல்கின்றன. ஆம் அவை என்ன செய்கின்றன? அவை மொய்ப்பதற்கு முன்பு ஒன்று கூடுகின்றன. முற்றிலுமாக! இயற்கை ஒவ்வொன்றும்! மீன்கள் தங்களை இணைத்துக் கொள்கின்றன. கடலில் அவைகளைக் காணலாம்... 'ஹம்பிஸ்' என்று நாம் அழைக்கும் அந்த சாமன் மீன். அந்த தண்ணீர் கடலை அடைவதற்கு முன்பு அவைகளை நீங்கள் ஆயிரக்கணக்கில் காணலாம். அவை உப்புத் தண்ணீர் கடலில் சுற்றி சுற்றி வருகின்றன. ஆனால் உண்மையில் அவை உப்பில்லாத தண்ணீரை சேர்ந்தவை. இதோ அவை முட்டையிடுவதற்காக உப்புத் தண்ணீரை விட்டு வருகின்றன. அவை நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அங்கு சென்று முட்டையிட்டு, முட்டையிட்டவுடனே சாகின்றன. அவை சாகப்போகின்றன என்று தெரியும். அவைகளை நீங்கள் எக்காரணத்தைக் கொண்டும் நிறுத்த முடியாது. அவை ஏணித்தடைகள் அனைத்தையும் மீறி குதித்து, அவை சாகப்போகின்றன என்று அறிந்தும் அங்கு செல்கின்றன. இயற்கையின் விதி அவை வயதான காலத்தில் அங்கு சென்று முட்டையிடச் செல்கின்றது. சிறு மீன்கள் முட்டையிலிருந்து தோன்றுகின்றன. ஏதோ ஒன்று அவைகளை ஒன்றிணைக்கின்றன. அவை கடலில் நீந்திச் செல்கின்றன. அது இணைப்பு. அது விதி. நீங்கள் தேவனுடைய விதியை வெல்ல முடியாது. 57நாடுகள் உடைகின்றன. நாம் காணும் இந்நேரத்தில் அவை உடைந்தே ஆகவேண்டும். நாம் இப்பொழுது நாடுகள் குழப்பமடையும் நிலையில் இருக்கிறோம். நாடுகள் ஒன்றுகொன்று உறவை முறித்துக் கொள்வதை நாம் காண்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் இந்த தேசம் கம்யூனிஸத்தினால் விழுங்கப்படுவதை நாம் காண்கிறோம். நம்முடைய சொந்த தேசம் கம்யூனிஸத்தினால் ஊடுருவப்பட்டுள்ளது. விரைவில் அது ஆதிக்கம் பெறும்! பாருங்கள், அது அப்படி செய்யும். அதை நிறுத்த வழியேயில்லை. ஏன்? தீத்துவை எப்படி நிறுத்த முடியவில்லையோ, அதே காரணத்தால் தான் இதையும் நிறுத்த முடியாது. ஜனங்கள் தேவனையும் அவருடைய வார்த்தையையும் புறக்கணித்து விட்டனர். ஆம், ஐயா, ஆகையால் கம்யூனிஸம் அப்படி செய்யும். அப்படி செய்யக்கூடிய வழியில் அது உள்ளதை நாம் காண்கிறோம். சாதாரணமாக நான் சில மணி நேரங்கள் எடுப்பது வழக்கம். ஏற்கெனவே நான் முப்பது நிமிடங்கள் பிரசங்கித்து விட்டேன். பாருங்கள்? இவையெல்லாவற்றையும் கூற நான் விரைவாகப் பேசுகிறேன். நீங்கள் வீடு சென்று இதை படியுங்கள். 58கவனியுங்கள், இப்பொழுது அவர்கள் ஒன்று சேருகின்றனர், நீங்கள், ''சகோ. பிரன்ஹாம், அது உண்மையா?'' என்று கேட்கலாம். அவர்கள் அர்மகெதோன் யுத்தத்துக்கு வருகின்றனர். அதைதான் அவர்கள் செய்யப் போகின்றனர். பாருங்கள்? அதற்காக அவர்கள் இப்பொழுது ஒன்று கூடுகின்றனர். அதற்காகத்தான் ஐ.நா. சபையும் மற்றவையும் உள்ளன. மேற்கத்திய உலகம் கிழக்கத்திய உலகத்துக்கு விரோதமாக - கம்யூனிஸம் போன்றவைகளுக்கு விரோதமாக - ஒன்றிணைகின்றது. அவையனைத்தும் ஒன்று கூடுகின்றன. சபைகள் ஒன்றிணைகின்றன. எல்லாமே இணைவது போல் தோன்றுகிறது. அவர்கள் தங்களை இணைத்துக் கொள்வதை நாம் காண்கிறோம். தேசங்கள் ஒன்று சேரும் இந்த அடையாளங்களுடன், நாம் உலகில் பல இடங்களில் பூமியதிர்ச்சி உண்டாவதைக் காண்கிறோம். வெவ்வேறு காரியங்கள் ஒன்றிணைந்து, உலகத்தை ஒன்று சேர்த்து, ஜனங்களை ஒன்று சேர்த்து, சபைகளை ஒன்று சேர்க்கின்றன, இந்த இணைப்பு நடந்து கொண்டிருக்கும்போதே, மற்றொரு இணைப்பு நடந்து கொண்டிருக்கிறது. ஆமென்! அதை தான் இப்பொழுது நான் சுட்டிக் காண்பிக்க விரும்புகிறேன். 59தேவன் தமது மணவாட்டியை ஒன்று சேர்க்கிறார் அவள் கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து வந்து ஒன்றாக இணைகிறாள். இணையும் நேரம் ஒன்றுண்டு, அது இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. அவள் எதற்காக இணைகிறாள்? எடுத்துக்கொள்ளப்படுதலுக்காக. ஆமென்! தேவன் அவளை ஆயத்தப்படுத்தி வருகிறார். ஆம் ஐயா, இணைதல், அவள் எதனுடன் இணைகிறாள்? வார்த்தையுடன். ஏனெனில் ''வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை''. ஸ்தாபனம் அல்லது வேறு யார் என்ன கூறினபோதிலும், அவள் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதுடன் தன்னை இணைத்துக் கொள்கிறாள். அவள் தன்னை இணைத்துக் கொள்கிறாள். அவள் ஆயத்தமாகிறாள். ஏன்? அவள் மணவாட்டி. அது உண்மை. அவள் தன்னை தன் மணவாளனுடன் இணைத்துக் கொண்டுவிட்டாள் (பாருங்கள்?) மணவாளன் வார்த்தையே. ''ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம் பண்ணினார்''. 60சபையும் மணவாட்டியும் வார்த்தையும் ஒன்றாகிக் கொண்டு வந்து முடிவில் வார்த்தையே மணவாளனின் கிரியையை செய்கின்றது. ஆமென்! உங்களால் காணமுடிகிறதா? இணைதல். இனி ஒருபோதும் ''சபையைச் சேர்ந்து கொள்ளுங்கள்'' என்றல்ல. ஆனால் எல்லாவற்றையும் விட்டு ஓடி இயேசு கிறிஸ்துவுடன் இணைந்து கொள்ளுங்கள். பாருங்கள்? இது இணையும் நேரம். தேவன் தமது மணவாட்டியை மறுபடியும் கொண்டு வந்து ஒன்றாக இணைக்கிறார்; தமது வாக்குத்தத்தத்தின் வார்த்தைகளை இணைக்கிறார். 2 தெசலோனிக்கேயர், 2ம் அதிகாரம்; 5ம் அதிகாரத்தில் பூமியின் தூளில் நித்திரை பண்ணும் பரிசுத்தவான்கள் எழுந்திருப்பார்கள் என்றும், நாம் அவர்களுடன் இணைக்கப்படுவோம் என்றும் கூறப்பட்டுள்ளது (அதாவது உயிரோடிருப்பவர்கள் மரித்தோருடன்) நாம் அங்குசெல்வதற்கு முன்பே இணைக்கப்படுவோம். ஏனெனில் அங்கு செல்லும்போது மணவாட்டி பூரணமாயிருப்பாள். உயிரோடிருந்து வார்த்தையுடன் தங்களை இணைத்துக் கொண்டிருப்பவர்கள்; ஏற்கெனவே சென்றவர்கள் அவ்வாறு செய்தனர். எடுத்துக்கொள்ளப்பட்டு மேலே செல்வதற்கு முன்பு இவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து ஒரு பெரிய இணைப்பாக ஆவார்கள் ஆமென்! 61கம்யூனிஸம் எழும்பவேண்டும், இந்த மற்றவைகளும் எழும்ப வேண்டும். சபைாயனது தன்னை எல்லா தேசங்களிலும் உலக சபைகள் ஆலோசனை சங்கத்துக்கென இணைத்துக் கொள்ள வேண்டும். மணவாட்டி தேவனுடைய வார்த்தையின் கீழ் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்வதற்கென தேவன் ஒரு வானத்தின் அடையாளத்தை கீழே அனுப்பி ஒரு தேசம் உண்டு என்பதை சபைக்கு நிரூபித்திருக்கிறார். ஆமென். 62தேவன்; இணையும் நேரம்! ஆ, ஐயா. ஓ, என்னே! இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள். வார்த்தையின் இணைப்பு ஒன்றுண்டு (மறுபடியும் இணைக்கப்படுதல்), “பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புவிக்கப்பட்ட விசுவாசத்தை'' மீண்டும் கொண்டு வருதல்! அது இந்த நாளில் மாத்திரமே செய்யப்படமுடியும். அது செய்யப்படக்கூடிய ஒரே நேரம் தற்பொழுதே. அது வேறெங்கும் தாக்கப்படவில்லை. அவர்கள் தங்கள் ஸ்தாபன உல்லாசத்தில் சென்று கொண்டிருந்தனர். இப்பொழுதோ அது எந்த ஸ்தாபன உல்லாசத்தையும் சேர்ந்ததல்ல. ஏனெனில் ஒவ்வொரு ஜாதியிலும், ஒவ்வொரு நிறத்திலும், ஒவ்வொரு கொள்கையிலும், கிறிஸ்துவின் கீழ் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் மூலம் தேவனுடைய வார்த்தைக்கு திரும்பியுள்ள மனிதர்களையும் ஸ்திரீகளையும் இணைக்கும் நேரம் இதுவே. 63சபைக்கு இணையும் நேரம்! ஓ, என்னே! ஸ்தாபனங்களால் தூரம் சிதறப்பட்ட ஒவ்வொரு வார்த்தையையும் இணைத்தல்: ரோமாபுரியிலிருந்த நிசாயாவில் அவர்கள் முதலாம் ஸ்தாபனத்தை உண்டாக்கிக் கொண்ட முதற்கு, அவர்கள் லூத்தரன் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டனர், வெஸ்லியன் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டனர். மற்ற ஸ்தாபனங்களையும் உண்டாக்கிக் கொண்டனர். அப்படி செய்ததன் காரணமாக அவர்கள் ஒரு கோட்பாட்டை நியமித்துக் கொள்ள வேண்டியிருந்தது. அதன் விளைவாக தேவன் வேறொன்றை அனுப்பினபோது, அவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே இதுவரைக்கும் அது கூடாமற்போயிற்று, கடைசி நாட்களில் பிதாக்களின் விசுவாசம் மணவாட்டிக்கு திரும்ப அளிக்கப்படுமென்று தேவன் வாக்களித்துள்ளார். அது அப்படித்தான் இருக்கும். அது இந்த நேரத்தைத் தவிர வேறெந்த நேரத்திலும் இருக்க முடியாது. வானத்திலிருந்து ஒரு அடையாளம் அக்கினி ஸ்தம்பமாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அடையாளங்கள் அற்புதங்களுடன் நம்மேல் தொங்கிக் கொண்டிருப்பதைப் பாருங்கள். அவர் நம்மிடம் பேசும்போது, அது சிறிதும் கூட பிழையற்றதாக இருக்கத் தவறினதில்லை. ஆமென்! அப்பொழுது நாம் எங்கு நின்று கொண்டிருக்கிறோம் என்பதைக் காண்கிறோம். இணையும் நேரம்! 64நாடுகள் இணைவதை நாம் காண்கிறோம். உலகம் இணைவதை நாம் காண்கிறோம், கம்யூனிஸம் இணைவதை நாம் காண்கிறோம். சபைகள் இணைவதை நாம் காண்கிறோம்: அதே சமயத்தில் தேவன், தாமும் சபையும் ஒன்றாகும் வரைக்கும் (ஒரே குடும்பமாக, ஒன்றாக), தம்மை தம்முடைய மணவாட்டியுடன் இணைத்துக் கொண்டிருக்கிறார். உண்மை! தங்களை ஒன்றாக இணைத்துக் கொள்ளுதல்; தேவன் இணைகிறார்! ஏன்? ஆதி சபையின் காலத்திற்கு பிறகு, எந்த ஒரு காலத்திலும் அக்கினி ஸ்தம்பம் ஜனங்களின் மத்தியில் தோன்றினதில்லை. ஆதி சபையின் காலத்திற்கு பிறகு, எந்த ஒரு காலத்திலும் அவர்கள் நாம் காணும் காரியங்களைக் கண்டதில்லை. தேவன் ஏழு தூதர்களை பரலோகத்திலிருந்து கீழே அனுப்பி நமக்கு ஒரு அடையாளத்தை கொடுத்ததன் விளைவாக இது சாத்தியமாயிற்று. அவர் தமது பரிசுத்த ஆவியை அனுப்பி, ஸ்தாபனங்களால் சிதறப்பட்ட வார்த்தையை மீண்டும் கொண்டு வந்து அதை தேவனுடைய வார்த்தையுடன் இணைக்கச் செய்தார். 65“நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்'' என்று இயேசு உரைத்தார். மணவாட்டியை மறுபடியும் வார்த்தையுடன் இணைத்தல். வார்த்தை தேவனே, சபையும் வார்த்தையும். சபையும் கோட்பாடும் அல்ல, சபையும் வார்த்தையும்; மணவாட்டியும் வார்த்தையும் ஒன்றாக இணைதல். ஓ, என்னே! என்ன ஒரு... எதை திரும்பப்பெறுவது? லூத்தரின் குழுவினால் சிதறடிக்கப்பட்ட மூல பெந்தெகொஸ்தே பிதாக்களின் விசுவாசத்தை (பாருங்கள்?) லூத்தர் இதை செய்யவில்லை, லூத்தர் அல்ல, வெஸ்லி அல்ல, அந்த பெரிய ஸ்தாப கர்கள் அல்ல. ஆனால் அவர்கள் சென்ற பிறகு சபை ஒன்று எழுப்பப்பட்டது. அவர்கள்.... அவர்கள் அப்பொழுது என்ன செய்தனர் என்றால், ஒரு ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டனர். அவர்கள் கோட்பாடுகளையும் மற்றவைகளையும் ஏற்றுக்கொண்டு அகன்று சென்றனர். இன்றைக்கு அவர்களைப் பாருங்கள், அவர்கள் இப்பொழுது உலக சபைகள் ஆலோசனை சங்கத்தில் சேர்ந்துவிட்டனர். இப்பொழுது, பாருங்கள். இந்தக் கடைசி நாட்களில், முன்பு நடக்காத காரியங்கள் நடப்பதை நாம் காண்கிறோம். பாருங்கள், அது தேவனுடைய அடையாளம். இந்த ஒன்று சேர்தல் அனைத்தும் காலத்தின் அடையாளம். நாம் அதை கவனமாகப் பார்த்து, அதை அறிந்து கொண்டோம் என்னும் நிச்சயத்தை உடையவர்களாயிருக்க விரும்புகிறோம். அவர்கள் ஸ்தாபனத்திற்கென உண்மையான வார்த்தையை விட்டகன்று வார்த்தையை ஏற்றுக் கொள்வதற்கு பதிலாக வெவ்வேறு மனிதர்களின் கோட்பாடுகளையும் கருத்துக்களையும் ஏற்றுக்கொள்கின்றனர். 66வெளிப்படுத்தல் 10ம் அதிகாரம், ''ஏழாம் தூதனின் செய்தி'' என்றுரைக்கிறது. அது ஏழு எக்காளங்களின் போது. ஏழு தூதர்கள் ஏழு எக்காளங்களை ஊதுகின்றனர். அதற்கு நாம் அடுத்தப்படியாக வருகிறோம். ஆனால் ஞாபகம் கொள்ளுங்கள். அது பிரத்தியேகமாய்'' ''தூதனின்...'' என்றுரைக்கிறது. ஏழாம் தூதனின் எக்காளம் அல்ல, ஆனால் “ஏழாம் தூதனின் செய்தி.'' பாருங்கள், எக்காளத் தூதன் அல்ல, செய்தி தூதன்! பாருங்கள், தூதன் எக்காளத்தை மாத்திரம் ஊதினான் - இந்த ஏழாம் தூதன். அது எக்காளத் தூதன். ஆனால் ஏழாம் தூதனின் செய்தியின் நாட்களில்; பாருங்கள், அவனுடைய செய்தி நிறைவேறும் போது. பாருங்கள், அது சபை காலத்தின் செய்தி. இந்தமுறை அவர்..... செய்தி, எக்காளம் அல்ல, ”தேவரகசியம் (வேதத்தில் எழுதப்பட்டது) நிறைவேறும்.'' 67நாம் எந்த நாளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைக் கவனியுங்கள்! அந்த முத்திரைகளைக் கவனியுங்கள். அது சிதறப்பட்ட தேவனுடைய வார்த்தையை எப்படி கொண்டு வந்தது என்று. இது லூத்தரும் மற்ற மகத்தான சீர்திருத்தக்காரரும் செய்தவைகளை வேதாகமத்தில் எடுத்துக்காட்டி, ஒவ்வொருவரும் என்ன செய்வார்கள் என்றும், சபைக்கு என்ன நடக்குமென்றும், அவர்கள் கூறாமல் விட்டுவிட்டதை எல்லாம் எடுத்துக்கூறினது. இந்த கடைசி நாளில், அதைக்குறித்து நாம் ஒன்றுமே அறியாதிருந்தபோது, ஒரு குறிப்பிட்ட சம்பவம் நடக்கும் என்று அவர் முன்னறிவித்தார். செய்தித்தாள்களும் கூட அதை வெளியிட்டன. அவர் இறங்கி வந்து அதை வெளிப்படுத்தி, எல்லா இரகசியங்களையும் ஒன்றாக இணைத்துக் கூறினார் ஆமென்! அது எனக்கு பயபக்தியான ஒன்று! அது என்னைப் பொறுத்தவரையில் வார்த்தையை வரிசைப்படுத்துகிறது.... ஜனங்கள் என்ன நினைத்தாலும் கவலையில்லை. ஜனங்கள் என்ன நினைக்கிறார்கள் என்று எனக்கு கவலையுண்டு. அது உண்மை. ஆனால் என்னை பொறுத்த வரையில், அது வேதாகமத்தின் சத்தியம். 68பாபிலோனிலிருந்து வந்த சாஸ்திரிகள், “யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவர் இப்பொழுது பூமியில் இருக்கிறார். அவரை நாங்கள் கண்டுபிடித்தே ஆகவேண்டும்'' என்று கூச்சலிட்டது போல். அது உண்மை. அவருடைய வருகை மிகவும் அருகாமையில் உள்ளது என்று நான் விசுவாசிப்பதால், நானும் ”இதோ, மணவாளன் வருகிறார்! நான் நடுராத்திரி சத்தத்தைக் கேட்கிறேன்'' என்று கூறமுடியும். அல்லேலூயா! நாம் முடிவு நேரத்தில் இருக்கிறோம். ஓ என்னே, நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்நேரம். கவனியுங்கள்.... பாருங்கள்? என்ன ஒருநாள்! நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நேரம் எப்படிப்பட்டது! இந்த பெரிய தேவரகசியம் முடிந்துவிட்டது: தேவத்துவத்தை கொண்டுவந்து, அது என்னவென்று காண்பிக்கப்பட்டது. இந்த சிறு தத்துவங்கள் புறப்பட்டு சென்றிருந்தன. ஒருவர் அவரை இதுவாக செய்திருந்தார். மற்றொருவர் அவரை அதுவாக செய்திருந்தார். ஆனால் கர்த்தருடைய தூதன் இறங்கிவந்து, அவர்களுடைய தத்துவங்கள் அனைத்தையும் காண்பித்து, அதிலிருந்து உண்மையை வெளியே இழுத்து, அதை நமக்களித்தார். அது இதோ பிழையற்றதாய் அமைந்துள்ளது, நீங்கள் வேறு எந்த வழியிலும் செல்ல முடியாது. பார்த்தீர்களா, அதுதான் அவர். பாருங்கள், சர்ப்பத்தின் வித்து - ஜனங்களிடையே இரகசியமாக அமைந்திருந்த வெவ்வேறு காரியங்கள். பாருங்கள்? அது என்ன? அவர்... இது எதற்கு அடையாளம்? இணைவதற்கு. 69அவர் மல்கியா - 4ல் என்ன கூறியுள்ளார்? திருப்புவதாக. ஜனங்களை மூல பெந்தெகொஸ்தே விசுவாசத்துக்கு - அதே பெந்தெகொஸ்தே செய்திக்கு, அதே பெந்தெகொஸ்தே அடையாளத்துக்கு, அதே பெந்தெகொஸ்தே வரத்துக்கு - திருப்புதல். அதே தேவன், அதே வல்லமை, அதே போதகம், எல்லாம் அதுவே; பவுலை தமஸ்குவுக்குப் போகும் வழியில் வீழ்த்தின அதே அக்கினி ஸ்தம்பம் நமது மத்தியில் இன்று இருந்துகொண்டு, அந்நாளில் அவர் செய்த அதே காரியங்களை இன்று செய்து வருகிறது. இணைதல் நாடுகள் இணைவதை நாம் காண்கிறோம், உலகம் இணைவதை நாம் காண்கிறோம். சபைகள் இணைவதை நாம் காண்கிறோம். அதே சமயத்தில் மணவாட்டி வார்த்தையுடன் இணைவதை நாம் காண் கிறோம், வார்த்தை தேவன். வார்த்தையானது.... வார்த்தையாகிய மணவாளனும், வார்த்தையைக் கேட்கும் மணவாட்டியும் விவாகத்தில் இணைவது போல் இணைகின்றனர். பாருங்கள், அவர்கள் விவாகத்துக்கு ஆயத்தமாகின்றனர். அவர்கள் இருவரும் ஒருவராயிருக்கின்றனர். வார்த்தை நீங்களாகவும், நீங்கள் வார்த்தையாகவும் ஆகிவிடுகின்றீர்கள். இயேசு, அந்நாளில்..... என்ன தெரியுமா? பிதா என்னவெல்லாமாக இருக்கிறாரோ, அவையனைத்தும் நானாக இருக்கிறேன். நான் என்னவெல்லாமாக இருக்கிறேனோ, அவையனைத்தும் நீங்களாக இருக்கிறீர்கள். நீங்கள் என்ன வெல்லாமாக இருக்கிறீர்களோ, அவையனைத்தும் நானாக இருக்கிறேன். நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள் என்றார். பாருங்கள்? ''அந்நாளில்'' எந்நாளில்? இந்த நாளில்! பாருங்கள், மறைக்கப்பட்ட தேவனுடைய மகத்தான இரகசியங்கள் வெளிப்படுவதை அறிவீர்கள், ஓ அது எனக்கு எவ்வளவு பிரியம்! 70ஓ, இன்றைக்கு விஞ்ஞானமும் வார்த்தையும் ஒப்பிடப்பட முடிவதுபோல் முன்பு முடியவில்லை. முன்பு அவர்களால் அதை செய்ய முடியவில்லை. இப்பொழுது அவர்களால் செய்ய முடிகிறது. கவனியுங்கள், அவர் ''வானத்தில் அடையாளங்கள், வானத்தில் அடையாளங்கள்'' என்றார். விஞ்ஞானம், ராஜ்யத்தின் அடையாளங்கள். இன்றைக்கு அவர்களுக்கு வானத்தில் பெரிய அடையாளங்கள் உண்டு. அவர்களுக்கு விண்வெளி வீரர்கள் உள்ளனர். ஆனால் இந்த விண்வெளி வீரர்கள் உலக விஞ்ஞானத்துக்கு என்ன செய்துள்ளனர்? அது அவர்களுக்கு பயத்தை விளைவித்துள்ளது. எந்த நேரத்தில் அவர்கள் விண்வெளிக்கு சென்று அங்கிருந்து குண்டுகளைப் போட்டு நம்மை அழித்து விடுவார்களோ என்னும் திகில் ஏற்பட்டுள்ளது. பாருங்கள்? அப்படிப்பட்ட அடையாளங்களை அவர்கள் பெற்றுள்ளனர் - வானத்தின் பயங்கரமான தோற்றங்கள் (Fearful signs) பாருங்கள்? அவர்கள் அணுசக்தி ஏவுகணைகள் போன்றவைகளைப் பெற்றுள்ளனர்? - எல்லாவிதமான அடையாளங்கள். 71அன்றொரு நாள் அவர்கள், இனிமேல் எந்த அணுகுண்டுகளையும் வெடிக்கப் போவதில்லை என்று ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். ஆனால் இப்பொழுதோ அவர்கள் கடலின் அடியிலும் பூமிக்கடியிலும் அணுகுண்டு சோதனை நடத்தி வருகின்றனர். பாருங்கள்? அவர்கள் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு, “நாங்கள் இதை செய்ய மாட்டோம்'' என்று சொல்லிவிட்டு, ”ஆனால் நாங்கள் வீடு சென்று அதை செய்வோம்; ஓ, ஆ, நீங்களும் அதையே அங்கு செய்வீர்கள் என்று அறிவோம்“ என்கின்றனர். பாருங்கள்? எந்த ஒரு நம்பிக்கையும் அவர்களிடையே இல்லை. அவர்கள் ஒருவரையொருவர் நம்புவதில்லை. நீங்கள்.... பாருங்கள்? ஒருவர் மற்றவரைக் கண்டு பயப்படுகின்றார். அது ஒரு பயத்தை விளைவிக்கும் அடையாளம். 72விஞ்ஞானமும் மனிதரும் நாடுகளும் வானத்தில் பயத்தை விளைவிக்கும் அடையாளத்தை தோன்றப்பண்ணியுள்ளன. அது முற்றிலும் உண்மை. ஒருவரைப் பார்த்து ஒருவர் பயப்படுதல். அவர்களுக்கு வானத்தில் ஒரு அடையாளம் கொடுக்கப்பட்டுள்ளது.... இப்பொழுது பாருங்கள், வானத்தில் அவர்களுக்கு பயத்தை விளைவிக்கும் ஒரு அடையாளம் உள்ளது. அதுதான் விண்வெளி வீரன். அவன் விண்வெளிக் கப்பலில் அணுசக்தி ஏவுகணையைக் கொண்டு சென்று, அதை போட்டு முழு நாட்டையே அழித்துவிட முடியும். அவன் அப்படி செய்வதைத் தடுப்பதற்கு ஒன்றுமேயில்லை. அவர்கள் நிச்சயமாக அப்படி செய்ய முடியும். அவர்கள் விரும்பும் எந்த நேரத்திலும் அதை செய்ய முடியும். அவர்கள் பதினைந்து நிமிடங்களுக்குள் இதை தவிடு பொடியாக்கி விட முடியும். ஒருவர் செய்வதை மற்றவரும் செய்ய முடியும். எனவே பாருங்கள், அவர்கள் ஒரு அடையாளத்தைப் பெற்றுள்ளனர், அந்தவிதமான அடையாளம் பயத்தை விளைவிக்கிறது. அவர்கள் ஒன்றிணைந்து, தங்கள் வல்லமையை ஒன்று திரட்டுகின்றனர். சுயாதீன உலகம் தன் வல்லமையை ஒன்று திரட்டுகின்றது. கம்யூனிஸம் ருஷியாவுடன் தன் வல்லமையை ஒன்று திரட்டுகின்றது. ஒவ்வொருவரும் அப்படி செய்கின்றனர். ஆனால் ஒருவருக்கு மற்றவரிடம் பயம். பாருங்கள், அது பயத்தை விளைவிக்கும் அடையாளம். அது உண்மை. அது ராஜ்ய சம்பந்தமன அடையாளம், பாருங்கள். 73ஆனால் சபை தன் வானத்தின் அடையாளத்தைப் பெற்றுள்ளது: ஒரு விண்வெளி வீரர்! ஆமென்! அக்கினி ஸ்தம்ப உருவில் இயேசு கிறிஸ்து. அவர் பழைய ஏற்பாட்டின் காலத்தில் இருந்தார். அதன் பிறகு அவர் சவுலை தமஸ்குவுக்குப் போகும் வழியில் சந்தித்தார். அதே இயேசு இன்று இங்கிருக்கிறார். அது என்ன செய்கிறது? பயத்தை விளைவிக்கிறதா? அது அன்பைக் கொண்டு வந்து ஒருவரையொருவர் இணைக்கிறது. ஆமென்! ஒருவருக்கொருவர் அன்பு உணர்ச்சி. அது தேவனுடைய அன்பைக் கொண்டு வந்து, ஓ, நம்மை இணைத்து, நம்மை (கிறிஸ்துவின் சரீரத்தை) மணவாட்டியாக ஒன்றுபடுத்துகிறது. அதைதான் - இப்பொழுது அது செய்து கொண்டிருக்கிறது. இந்த பெரிய இணைப்பை.... ஒரு சாரார் மற்றொரு சாராரை எதிர்ப்பதற்காக அவர்கள் ஒன்று கூடுகின்றனர். ஒரு சாரார் மற்றொரு சாராருடன் சண்டையிடுவதற்கென்று. அவர்களுக்கு நடுவில் சபை நின்று கொண்டிருக்கிறது. என்ன நடக்கப் போகிறதென்பதை கவனியுங்கள். அது அவர்களுடன் இணைந்துவிடும். அது முற்றிலும் உண்மை. ஆனால் இப்பொழுது அது பயத்தையும் பரபரப்பையும் விளைவிக்கிறது. 74ஆனால் சபையோ (மணவாட்டி) ஒரே தேவனால், ஒரே ஆவியின் கீழ் (தேவனுடைய ஆவியின் கீழ்), தேவனுடைய ஒரே பரிசுத்த ஐக்கியத்துக்குள் தேவனுக்கு ஒரே பரிசுத்த மணவாட்டியாக இணைக்கப்படுகிறது. அது உண்மை. எல்லாம் ஒன்றாக, சரீரம் இணைக்கப்படுகின்றது. சரீரமானது மணவாட்டியாவதற்கு காத்திருந்தது - அது மணவாட்டியே. ஏனெனில் நாம் நம்மை மணவாட்டியென்று அழைத்துக் கொள்கிறோம். இது மணவாட்டி இணையும் நேரம். சபையானது ஒன்று சேர்ந்து கொண்டிருக்கிறது. அது நாம் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து செல்லக் கடினமானயுள்ள அளவிற்கு, நம்மிடையே அப்படிப்பட்ட அன்பை தோன்றச் செய்ய வேண்டும். அது உண்மை. நாம் அப்படியே..... ஜெபம் பண்ண நீங்கள் ஜனங்களை கெஞ்ச வேண்டிய அவசியமிருக்காது. தேவனை ஆராதிக்க நீங்கள் ஜனங்களை கெஞ்ச வேண்டிய அவசியமிருக்காது.தேவனை ஆராதிக்க நீங்கள் ஜனங்களை கெஞ்ச வேண்டிய அவசியமிருக்காது சரியானதை செய்ய நீங்கள் அவர்களை கெஞ்ச வேண்டிய அவசியமிருக்காது. அவர்கள் அவர் பேரில் அவ்வளவாக அன்பு கூர்ந்திருப்பார்கள். அதை காட்டிலும் வேறொன்றும் இருக்காது. 75ஒரு அழகான பெண் அழகான வாலிபனின் மேல் மிகவும் காதல் கொண்டு அவனை மணம் புரிந்து கொள்ளப்போகிறாள் என்றால், அவளுக்கு தன் சொந்த ஜீவனைக் காட்டிலும் அது மேலானதாக இருக்கும். அவள் அவனை மணம் புரிந்து கொள்ளப் போகிறாள். என்று அறிந்திருக்கிறாள். திருமண நாள் அணுகுந்தோறும் அவள் உணர்ச்சி வசப்பட்டு சுற்றி சுற்றி நடந்து வந்து கொண்டிருப்பாள். பாருங்கள்? அவள் எல்லாவற்றையும் ஆயத்தமாக்குவாள். அவள் தன்னை முழுவதுமாக அவனுக்கு அர்ப்பணிக்கிறாள். அது உண்மை. அவனுக்கு பிரீதியாயுள்ள ஒவ்வொன்றையும் அவள் செய்ய விரும்புகிறாள். சபையும் அதே நிலையில்தான் இருக்கவேண்டும். நமது ஜீவன் கிறிஸ்துவின் மூலம் தேவனுக்குள் மறைந்து, அங்கு பரிசுத்த ஆவியினால் முத்தரிக்கப்பட்டிருக்க வேண்டும். 76இப்பொழுது நான் போதித்தவை, நடந்து கொண்டிருக்கும் அடையாளங்களையும் மற்ற காரியங்களையும் உங்களுக்கு எடுத்துரைத்தன. அவைகளை மேலும் விவரிக்க இப்பொழுது நேரமில்லை. கர்த்தருக்கு சித்தமானால் வேறொரு செய்தியில் அதை பார்ப்போம். ஆனால் சபையில் ஒரு சிறு காரியம் குறைவாய் உள்ளது. அதை நாம் பெறவேண்டும். இப்பொழுது நான்அந்த எல்லைக்கு வந்திருக்கிறேன். பாருங்கள்? அதை நாம் அடைய விரும்புகிறோம்... நீங்கள் அதை செய்தே ஆகவேண்டும். நீங்கள் செய்யாமல் போனால், அவ்வளவுதான். நீங்கள் கண்டிப்பாக செய்யவேண்டும். ஏனெனில் பாருங்கள், இணையும் நேரம் சமீபமாயுள்ளது. எடுத்துக் கொள்ளப்பட்டு கலியாணத்துக்கு சென்று அங்கு அந்த மகத்தான இணைப்பை அடைவதற்கென தேவன் தமது சபையை ஒன்று சேர்த்து வருகிறார். அங்கு தேவனும் மனிதனும் நித்திய காலமாக இணைந்திருப்பார்கள். அப்பொழுது காலவரம்புள்ள சிருஷ்டிகள் நித்தியத்துடன் இணைந்து விடுவார்கள். அது பூமியில் மனுஷகுமாரன் ரூபத்தில் ஒருமுறை நடந்தது. அவர் மற்ற மனிதரை - இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியை அதே வல்லமையுடன் இணைப்பதற்கென, தமது ஜீவனைக் கொண்டு அந்த வல்லமையை அளிக்க வேண்டியதாயிருந்தது. இப்பொழுது சபை தன்னை கிறிஸ்துவின் சரீரத்துடன் இணைத்துக் கொண்டிருக்கிறது: அது தன்னை எல்லா சிறு விலங்குகளிலிருந்தும் விடுவித்துக் கொண்டு ஆயத்தமாகி ஒன்றாக இணைந்து வருகிறது. ஓ, அன்பு, சந்தோஷம், பரிசுத்த ஆவி அவர்கள் மத்தியில் அசைவாடி வருகிறார். ஓ, என்னே, என்ன ஒரு நேரம்! 77வாத்துகள் ஆயத்தமாவதையும், கூஸ்வாத்துகள் ஆயத்தமாவதையும், தேனீக்கள்ஆயத்தமாவதையும், மழைக்கென மேகங்கள் ஆயத்தமாவதையும் நாம் காண்கிறோம் - எப்படி அந்தபெரிய உந்துதலுக்கென்று அவை தங்களை இணைத்துக் கொள்கின்றனவென்று. நாம் ஐ.நா.சபையில் நாடுகள் ஒன்று சேர்ந்துள்ளதையும், கம்யூனிஸத்தின் அடிப்படையில் நாடுகள் இணைவதையும் காண்கிறோம். மேற்கத்திய உலகில் நாடுகள் இணைவதையும் நாம் காண்கிறோம். சபைகள் தங்களை ஒன்றிணைத்துக் கொள்வதையும் மற்றெல்லாவற்றையும் நாம் காண்கிறோம். வேறெந்த நேரத்திலும் இப்படிப்பட்ட ஒரு இணைப்பு இருந்திருக்கவே முடியாது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு இப்படி இருந்திருக்க முடியாது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு இப்படி இருந்திருக்க முடியாது. இப்பொழுது மாத்திரமே அப்படி இருக்க முடியும். பாருங்கள் ஏனெனில் இந்த தத்துவங்களும் மற்றவைகளும் இதற்கு முன்பு இந்த இடத்தை அடையவில்லை. 78இப்பொழுது விழித்தெழுங்கள்! உங்களை வேகமாக அசைத்துக்கொண்டு, நாம் எங்கிருக்கிறோம் என்பதைக் காணுங்கள்! நாம் எங்கே இருக்கிறோம்? சாஸ்திரிகளைப்போல் நாம் அவருடைய வார்த்தையின் வரிசையில் வந்துவிட்டோம். கர்த்தருடைய ஒளி இப்பொழுது நம்முடைய பாதையில் - பிரகாசிக்கின்றது. உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையுண்டாவதாக! நாம் அன்புகூரும் இயேசு கிறிஸ்துவை நமக்குத் தந்தருளின தேவனுக்கு மகிமையுண்டாவதாக! அவர் நம்மை இந்த இடத்துக்கு கொண்டு வந்திருக்கிறார்..... நாம் அவருடைய ஜனங்கள், அவருடைய இரத்தத்தினால் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டவர்கள். ஓ, என்னே! இணையும் நேரம் வரும்போது, நாம் அவருடைய ஆவியின் கட்டுகளால் ஒருவரோடொருவர் இணைக்கப்பட்டுள்ளதைக் காண்கிறோம். நாம்.... அது அவருடைய ஆவியாயிருக்குமா?நிச்சயமாக, அது அவருடைய ஆவியே. அது என்ன? அது அவருடைய வார்த்தை. அவர்.... அது வார்த்தையின் ஆவி. வாக்குத்தத்தத்தின் ஆவி உங்கள் மேல் வந்து, தன்னை உறுதிபடுத்தி இங்கு வெளிப்படுத்தும்போது, அது அதே ஆவியா? மோசேயுடன் வனாந்தரத்தில் இருந்தது அவரே. இயேசு கிறிஸ்துவின் மேல் தங்கியிருந்ததும் அவரே. சவுலை தமஸ்குவுக்குப் போகும் வழியில் சந்தித்தவர் அவரே. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அவர் அதே காரியங்களைச் செய்கிறார். 79நாம் நாடுகள் ஒன்றிணைவதைக் காண்கிறோம். சபை ஒரு தலைவனின் கீழ் ஒன்று சேருவதைக் காண்கிறோம். கம்யூனிஸம் ஒன்றிணைவதைக் காண்கிறோம், கொள்கைகள் ஒன்றிணைவதை காண்கிறோம். இவையனைத்தும் நாம் காண்கிறோம்; இப்பொழுது மணவாட்டி வார்த்தையுடன் இணைவதை நாம் காண்கிறோம். ஓ, என்னே! மரித்த பரிசுத்தவான்கள் உயிரோடெழுந்து, உயிரோடிருப்பவர்களுடன் இணைந்து, மேலே சென்று இயேசு கிறிஸ்துவுடன் நித்திய காலமாய் இணைந்திருக்கும்படியான நேரம் வந்துவிட்டது. நாம் ஒவ்வொருவரும் இன்றிரவு இயேசுவுடன் இணைய தேவன் தாமே நமக்குதவி செய்வாராக... நம்முடைய எல்லாவற்றையும், நமக்குள்ள எல்லாவற்றையும் (நமது ஆத்துமா, சரீரம் சிந்தை அனைத்தும்) இயேசு கிறிஸ்துவுக்கு சமர்ப்பித்து, அந்த இணைப்பின் நேரத்தை எதிர்நோக்கியிருப்போமாக. தேவ எக்காளம் தொனித்து, காலம் இனி இராமல், காலை பிரகாசமாய் நித்தியத்துக்குள் உதிக்கும்போது, கிறிஸ்துவுக்குள் மரித்தோர் உயிரோடெழுந்து, (உயிரோடிருக்கும் மணவாட்டியுடன்) ஒன்றாக எடுத்துக் கொள்ளப்பட்டு, மறுகரையில் ஒன்று கூடும்போது, இணைப்பைப் பாருங்கள்! தேவன் சபையை தமது வார்த்தையுடனும், வார்த்தையை சபையுடனும் இணைத்து, இரண்டும் ஒன்றாகும்படி செய்கிறார். “இதை உரைத்தால், அது அப்படியே ஆகும். இதை செய்தால், அது அப்படியே ஆகும். அதுதான். அது உங்கள் முன்னால் நான் இருந்து கொண்டு, என்னை நிரூபிப்பதாகும். அது நான் உங்களுடன் கூட இருப்பதாகும்.'' அது சரி. 80எல்லோருமே... எக்காளம் தொனிக்கும் நேரம் வருகிறதை இப்பொழுது காண்கிறோம். நித்திரையடைந்த பரிசுத்தவான்கள் நம்மையல்லாமல் பூரணராக முடியாது (அதில் அநேக எபிரெய சகோதரர்களும் உள்ளனர்.) அவர்கள் ஒன்றாக உயிரோடெழும் போது உயிரோடிருக்கும் பரிசுத்தவான்களுடன் இணைகின்றனர். சபையானது வார்த்தையுடன் இணைந்து ஒன்றாகி விடுகின்றது. மரித்த பரிசுத்தவான்கள் உயிரோடிருக்கும் பரிசுத்தவான்களுடன் இணைந்து ஒன்றாகி விடுகின்றனர். எல்லோரும் ஒன்றாக மேலே சென்று, ஆட்டுக்குட்டியானவருடைய கலியாண விருந்துக்கென்று கிறிஸ்துவுடன் இணைகின்றனர். 81இது இணையும் நேரம், அடையாளங்கள் எங்கும் பறந்து கொண்டிருக்கின்றன. அடையாளங்கள் தேசங்களில் உள்ளன. அடையாளங்கள் கம்யூனிஸத்தில் உள்ளன, அடையாளங்கள் மேற்கத்திய உலகில் உள்ளன, அடையாளங்கள் உலக சபைகள் ஆலோசனை சங்கத்தில் உள்ளன, இன்றிரவு அடையாளம் பரிசுத்த ஆவியின் ஆதிக்கத்தின் கீழ் இங்குள்ளது. அதை தேவனுடைய வார்த்தை உறுதிப்படுத்தி உண்மையென்று நிரூபிக்கிறது. ஆமென்! இணையும் நேரம்! இணையும் நேரத்தின் அடையாளம்! நாம் தலை வணங்குவோம். 82கர்த்தராகிய இயேசுவே, இந்த சந்ததியில் நீர் வரக்கூடும் என்றும், எக்காளம் தொனிக்கும் போது நாங்கள் உயிருடன் நின்று கொண்டிருக்க வகையுண்டு என்பதை நடுத்தர வயதுள்ளவனாகிய நான் காணும்போது, என் எளிய இருதயம் களிப்பினால் துள்ளுகிறது. “அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்'' ஓ, கர்த்தராகிய தேவனே! ஒரு நிமிஷத்தில், இமைப்பொழுதில், என்ன நடக்கிறதென்று உலகம் அறியாதிருக்கும் போது, திடீரென்று உம்மோடு இணைவதற்கென, ஏற்கெனவே கடந்து சென்ற உமது அன்பானவர்கள் உமக்கு முன்பாக பிரத்தியட்சமாவார்கள் என்பதை இங்கு நின்று கொண்டு எண்ணிப்பார்க்கும் போது; நாங்களும் ஒரு நிமிஷத்தில், ஒரு இமைப்பொழுதில் மறுரூபமடைந்து, அவர்களோடு கூட எடுத்துக்கொள்ளப்பட்டு கர்த்தரை ஆகாயத்தில் சந்தித்து, அவருடன் இணைந்து, அவருடைய சமுகத்தை விட்டு இனி பிரிந்து போகாமல் அங்கு சதாகாலங்களிலும் இருப்போம். 83ஆண்டவரே, இப்பொழுது நாங்கள் ஒரே ஆவியால் இணைக்கப்பட்டுள்ளோம் என்று அறிந்திருப்பது எவ்வளவு பெரிய காரியம்! அந்த ஒரே ஆவி - பரிசுத்த ஆவி - வார்த்தையைத் தன் பிடியில் கொண்டவராய் எங்களுக்குள் வருகிறார். உலகத்தின் எல்லா கட்டுகளிலிருந்தும் முறித்துக்கொண்டு எங்களை இயேசு கிறிஸ்துவுடன் இணைத்துக் கொள்வதென்பது எவ்வளவு பெரிய சிலாக்கியம்! என்றாவது ஒருநாள் நாங்கள் அவருடைய மகிமையின் சரீரத்துக்கு ஒப்பான ஒரு சரீரத்தைக் கொண்டவர்களாய் அவரைக் கலியாணம் செய்து அவருடன் இணைந்து அந்த மேசையில் உட்கார்ந்து கலியாண விருந்தில் பங்கு கொள்வோம் என்பதை எண்ணிப்பார்க்கும் போது, நாங்கள் மணவாளனும் மணவாட்டியுமாக வரப்போகும் நாட்களில் நித்திய நித்திய காலமாய் வாழ்வோம். கர்த்தராகிய தேவனே, இதை ஜனங்கள் ஒரு கட்டுக்கதையாக எண்ணாமல், இது அவர்களுக்கு உண்மையுள்ள ஒன்றாக அமைந்து அவர்கள் பசிதாகங் கொள்ளவும், அவர்கள்.... அவர்கள் செய்தித் தாள்களைப் படித்து, வானொலியில் செய்தியைக் கேட்டு, இது இணையும் நேரம் என்று அறிந்து கொள்ளும்படி செய்யும். அடையாளங்கள் விட்டுவிட்டுப் பிரகாசிக்கின்றன. 84கர்த்தராகிய தேவனே, இந்த ஸ்திரீகள் கடைசி நாட்களில் என்ன செய்துள்ளார்கள்; சபை கடைசி நாட்களில் என்ன செய்யும்; சபை காலங்களில் என்ன நடக்கும்; முத்திரைகளில் என்ன இருக்கும் என்பதைக்குறித்து நாங்கள் பேசினோம். நோவாவின் காலத்தில் எப்படியிருந்தது என்று நாங்கள் பார்த்தோம். சோதோமின் நாட்களில் - லோத்தின் நாட்களில் - என்ன சம்பவித்ததென்று நாங்கள் பார்த்தோம். அப்பொழுது கர்த்தருடைய தூதன் தன்னை மானிட சரீரத்தில் வெளிப்படுத்தி மாட்டு இறைச்சியைத் தின்று, மாட்டின் பாலைக் குடித்து, அப்பத்தைத் தின்று, அங்கு நின்று கொண்டு தனக்குப் பின்னால் என்ன நடக்கிறதென்று கூறினார். மனுஷகுமாரன் வருகையிலும் அதே காரியம் நடக்குமென்று இயேசு உரைத்தார். கர்த்தராகிய தேவனே, நாங்கள் கூர்நுனிக் கோபுரம் எப்படி கட்டப்பட்டுள்ளது என்பதைக்கண்டு, இவைகளை நாங்கள் கூர்நுனி கோபுரத்தில் ஒன்றுடன் ஒன்றாக சேர்த்து, நாங்கள் கடைசி காலத்தில் இருந்து கொண்டு தலைக்கல்லுக்காக காத்திருக்கிறோம் என்பதை அறிந்திருக்கிறோம். தேவனுக்கு மகிமை! கர்ததாவே, நீர் ஜனங்களை இப்பொழுது உறக்கத்தினின்று வேகமாக எழுப்பி, எங்களை தேவ அன்பிலும், இயேசு கிறிஸ்துவின் பேரிலும் நாங்கள் ஒருவருக்கொருவர் கொண்டிருக்கும் மதிப்பிலும் ஒன்று சேர்க்க வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறோம். 85இன்றிரவு இங்கு யாருக்காகிலும் அந்த நம்பிக்கை அவர்களுக்குள் இல்லாமலிருந்தால், உங்கள் கரங்களை தேவனிடம் உயர்த்தி, ''கர்த்தராகிய தேவனே, என்னை உம்முடன் இணைத்துக்கொள்ளும், என்னை உம்முடன் இணைத்துக்கொள்ளும்'', என்று கூறுவீர்களா? சகோதரனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக; ஆம். “கர்த்தாவே, என்னை உம்முடன் இணைத்துக்கொள்ளும்'' ஆம்! ஓ, என்னே! நாடுகள் உடைகின்றன, இஸ்ரவேல் விழித்தெழுகிறாள். இஸ்ரவேலரை அங்கு பாருங்கள். அவர்கள் எல்லா நாடுகளிலிருந்தும் புறப்பட்டு வந்து தங்களை இணைத்துக் கொண்டனர். இப்பொழுது அவர்கள் ஒரு தேசமாக ஆகிவிட்டனர். அவர்கள் ஐக்கியமுள்ள ஒரு தேசம். அவர்களுக்கு தங்கள் சொந்த கொடி, சொந்த நாணயம், சொந்த இராணுவம், எல்லாம் உள்ளது. அவர்கள் எப்பொழுதாவது இந்நிலையில் இருந்தால், அது இப்பொழுதே. இஸ்ரவேல் ஒன்றிணைகிறது, ரோமாபுரி ஒன்றிணைகிறது, சபை ஒன்றிணைகிறது. மணவாட்டியும் ஒன்றிணைகிறாள், ஆமென்; வரவிருக்கும் அந்த மகத்தான இணைப்பு. அது என்ன? அது அந்த அடையாளத்தை நோக்கிச் செல்கிறது - இயேசுவும் அவருடைய மணவாட்டியும் ஒருவராக இணைதல். 86பிதாவே, தேவனே, இந்த ஜனங்களுக்காக நான் கேட்கும் ஆசீர்வாதங்களை அருளுவீராக. நாங்கள் உம்முடன் இருதயத்திலும் ஆவியிலும் இணைக்கப்பட்டிருப்போமாக. அதை விரும்புவதன் அறிகுறியாக அவர்கள் கரங்களை உயர்த்தினர். கர்த்தராகிய தேவனே, எங்களைச் சுத்திகரித்து உம்முடையவர்களாக்கிக் கொள்ளும் கர்த்தாவே, இதை அருளும். எங்களுக்கு செய்யத் தெரிந்ததெல்லாம் உம்மிடம் கேட்பதே. நாங்கள் எதையாகிலும் கேட்டு இதைப் பெற்றுக் கொள்வோம் என்று விசுவாசித்தால், அது அப்படியே ஆகும் என்று நீர் உரைத்திருக்கிறீர். கர்த்தாவே, அதை நான் எதிர்நோக்கியிருக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உமக்கு நன்றி செலுத்துகிறேன். ஆமென். நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன், முந்தி அவர் என்னை நேசித்ததால், சம்பாதித்தார் என் இரட்சிப்பை, கல்வாரி மரத்தில், (ஆமென்; ஓ, என்னே). இதோ மணவாளன் வருகிறார் என்னும், நடுராத்திரி சத்தத்தைக் கேட்கிறேன். நாம் உறுதியாயிருந்தால் ஆரவாரத்துடன் மேலே சென்று, அவரை ஆகாயத்தில் சந்திப்போம். (அல்லேலூயா) என் சகோதரனே உன் கிரீடத்தை, யாரும் எடுத்துக் கொள்ளாதபடிக்கு, விழித்திருந்து ஜெபம்பண்ணு, ஏனெனில் வெது வெதுப்பானவர்களும் பின்வாங்கிப் போனவர்களும், கலியாண வஸ்திரத்தை தரிப்பதில்லை. 87(அது உண்மை) இந்த நடுராத்திரி சத்தத்துக்கு நாம் ஆயத்தமாவோம். நீங்கள் நினையாத நேரத்தில் அது வரும். அந்த சத்தம் அவிசுவாசிக்கின்ற உலகத்தின் நடுவில் உண்டாகாது; அது இரகசியமாயிருக்கும். ஆனால் அதை எதிர்நோக்கியிருக்கும் விசுவாசிகளோ; நட்சத்திரங்கள் ஒரே வரிசையில் வந்துள்ளதைக் கண்டீர்களா? பாருங்கள்? அது எதை தோன்றச் செய்தது?அது முதன்முறை என்ன செய்ததோ அதையே பாருங்கள், நாம் இங்கு அடைந்துள்ளோம், அடையாளங்கள் தோன்றுகின்றன. அவருடைய ஆசீர்வாதமாகிய வருகையின் அடையாளங்கள் தோன்றுவதை நாம் காண்கிறோம். இதோ, அத்திமர இலைகள் பசுமையாயுள்ளன, இராஜ்யத்தின் சுவிசேஷம் ஒவ்வொரு தேசத்துக்கும் சென்றுவிட்டது; நாம் அருகாமையிலுள்ளோம், முடிவைக் காணமுடிகிறது; அப்படியானால் நாம் சந்தோஷத்துடன் ஆசீர்வதிக்கப்பட்ட, அவருடைய பிரத்தியட்சமாகுதலின் செய்தியை பறை சாற்றுவோம். 88அது சரியா? ஓ, ஆசீர்வதிக்கப்பட்ட அவருடைய பிரத்தியட்சமாகுதலின் செய்தியை பறைசாற்றுவோம்! அதை தான் நாம் செய்ய வேண்டியவர்களாயிருக்கிறோம். நாம் ஒவ்வொருவரிடமும், ''ஆயத்தப்படுங்கள்'' தேவனை சந்திக்க ஆயத்தமாகுங்கள்'' என்று சொல்வோம். ஆமென்! நான் அவரை நேசிக்கிறேன். ஓ, நான் எவ்வளவாய் அவரை நேசிக்கிறேன்! இப்பொழுது நாம் எழுந்து நிற்போம். நாம் ஒருவரோடொருவர் கைகுலுக்கி இப்படி சொல்வோம். நாம் சந்திக்கும் வரைக்கும்! (இப்பொழுது கைகுலுக்குவோம்) நாம் சந்திக்கும் வரைக்கும்! இயேசுவின் பாதங்களில் நாம் சந்திக்கும் வரைக்கும்; நாம் சந்திக்கும் வரைக்கும்.... (ஞாபகங் கொள்ளுங்கள் உங்களுக்கு அழைப்பு வரக்கூடும். நம்முடைய அடுத்த சந்திப்பு ஒருக்கால் அவருடைய பாதங்களில் இருக்கலாம்) ஓ, நாம் மறுபடியும் சந்திக்கும் வரைக்கும் தேவன் உங்களுடன் இருப்பாராக! 89சற்று யோசித்துப் பாருங்கள், நாம் மறுபடியும் சந்திப்பதற்கு முன்பு; நாம் ஞாயிறு காலை, அல்லது புதன் இரவு சந்திப்பதற்கு முன்பு, ஒருக்கால்... முதலாவதாக என்ன தெரியுமா, யாராவது ஒருவர் காணாமற் போயிருப்பார் இவர் காணாமற்போய் விட்டார். அவர்கள் போய்விட்டார்கள். ஓ, உங்கள் கணவர் காணாமற்போய் விட்டார், அல்லது உங்கள் மனைவி காணாமற்போய் விட்டாள், ஜானின் மனைவி காணாமற்போய் விட்டார் பிள்ளைகள் காணாமற்போய் விட்டனர் என்று எண்ணிப்பார்க்கும் போது! அதெல்லாம் நடந்து விட்டது (என்ன நடந்தது) நீங்கள் கைவிடப்பட்டீர்கள். ஓ இழக்கப்பட்டவர்களிடம் தங்களை நிலை கூறப்பட்டபோது, எப்படிப்பட்ட அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருந்தது; அவர்கள் மலைகளையும் குன்றுகளையும் பார்த்து கதறினார்கள்; (இஸ்ரவேலர் நாடு திரும்பிய பின் ஆலயத்துக்காக கதறுவது போல்) அவர்கள் விண்ணப்பம் பண்ணினர், ஆனால் அவர்களுடைய விண்ணப்பம் தாமதமாகிவிட்டது. (அவர்கள் செய்தியை புறக்கணித்தனர்.) ஓ, சகோதரனே, அப்படி ஒருக்காலும் செய்யாதே. நீ எதை செய்தாலும், அந்த நோக்கத்துக்காக தீரமாக நில்! ஆம், ஐயா! 90நாம் சந்திக்கும் வரைக்கும், இதை செய்வோம்: இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல், ஒவ்வொரு கண்ணிக்கும் கேடயமாக, உன்னைச் சோதனைகள் சூழும்போது, (என்ன செய்ய வேண்டும்?) அந்த பரிசுத்த நாமத்தை ஜெபத்தில் உச்சரி. விலையுயர்ந்த நாமம், ஓ எவ்வளவு இனிமை! பூலோகத்தின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம்; விலையுயர்ந்த நாமம், ஓ எவ்வளவு இனிமை! பூலோகத்தின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம். நாம் மௌனமாக இசைக்கும்போது, தலை வணங்குவோம்: இயேசுவின் நாமத்தில் முழங்கால்களை முடக்கி, அவருடைய பாதங்களில் சாஷ்டாங்கமாய் விழுந்து, நமது யாத்திரை முடியும்போது, (என்றாவது ஒருநாள் அது முடியும்) அவரை ராஜாதி ராஜாவாக முடிசூட்டுவோம். விலையுயர்ந்த நாமம், ஓ எவ்வளவு இனிமை! பூலோகத்தின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம்; விலையுயர்ந்த நாமம், ஓ எவ்வளவு இனிமை! பூலோகத்தின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம்.